மதிக்குறது?"
"என்ன விஷயம் விவேக்? ஏதாவது பிரச்சனையா?" என்றான் பார்த்திபன் சற்று தீவிரமாக.
விவேக் பாரதியுடனான சந்திப்பு பற்றியும், பின் ப்ரின்சிபாலுடன் அவன் பேசியது பற்றிய விபரங்களையும் கூறினான்.
"என்னடா விவேக் இவ்வளவு நடந்து இருக்கு நீ என்கிட்டே ஒன்னும் சொல்லவே இல்லை...?"
"நீ மட்டும் என்னடா செய்வ? காலேஜுக்கு ரிசல்ட்ஸ் தானே முக்கியம்... வேறென்ன வேணும்?"
"என்னடா விவேக் இப்படி பேசுற? இப்போ உனக்கு என்ன வேணும்? அந்த பாரதிய வேற கிளாசுக்கு மாத்தனுமா? இல்லை கூப்பிட்டு கண்டிக்கனுமா? சொல்லு..."
"உனக்கு சொன்னா புரியுமான்னு எனக்கு தெரியலைடா பார்த்தி... என் தங்கச்சிக்கு நான் எப்போதும் ஹீரோ மாதிரி... அவளே என்னைப் பார்த்து சிரிக்கிறா... அவள் கட்டாயம் அண்ணிக் கிட்ட சொல்லி இருப்பாள்... அண்ணிக்கு விஷயம் தெரிஞ்சா அண்ணாக்கு தெரிஞ்சிருக்கும்... இன்னும் யாருக்கு எல்லாம் தெரியுமோ? ஏன் அங்க காலேஜிலேயே அந்த பாரதி கூடவே இன்னொரு லெக்சரரும் இருந்தாங்க... அவங்க எத்தனை பேர் கிட்ட சொல்லி இருப்பாங்க? இதுக்கு மேலே என்னை யாராவது இன்சல்ட் பண்ண முடியுமாடா?"
"ம்ம்ம்... இப்போ என்ன செஞ்சா உன் மனசுக்கு சந்தோஷமா இருக்கும்ன்னு சொல்லு...?"
"வேற என்னடா? அவ அன்னைக்கு செஞ்ச மாதிரியே நான் இல்லையென்றால் கூட வேற யாராவது அவளை ஒரு ரெண்டு பேர் இருக்கும் போது லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினால் போதும்..."
"அவ்வளவு தானே... செய்யலாம்... ம்ம்ம்...." என்று சற்று சிந்தனையில் ஆழ்ந்தான் பார்த்திபன். சில வினாடிகள் அமைதிக்கு பின்,
"விவேக், நீ என் ஃபிரெண்ட் உனக்காக நான் இதை செய்வேன்... ஆனால்... நல்லா யோசிச்சு