"என்ன ஆச்சு மதுமதி? இங்கே நின்னுட்டு என்ன செய்ற?" பாரதியே மதுமதியிடம் விசாரித்தாள்.
"உங்களைப் பார்த்து பேச தான் வந்தேன் மேடம்..."
"என்ன, ஏதாவது டவுட்டா?"
"இல்லை மேடம்... காலையில அண்ணா பேசினதுக்கு சாரி சொல்ல வந்தேன்..." என்றாள் மதுமதி மென்று முழுங்கியபடி.
"ம்ம்ம்.... அதை சொல்லவா இவ்வளவு கஷ்டப் படுற?" என்றாள் பாரதி சாதாரணமாக.
"வந்து மேடம்... உங்களுக்கு என் மேல் கோபம் இருக்கும்னு நினைச்சேன்..."
"எனக்கு கோபம் எல்லாம் இல்லை... போதுமா?"
"ரொம்ப தேங்க்ஸ் மேடம்.... நான் அண்ணா கிட்ட வந்து உங்க கிட்ட பேச எல்லாம் சொல்லவே இல்லை மேடம்... நான் அண்ணி கிட்ட பேசிட்டு இருந்தேனா அப்போ சின்ன அண்ணா அங்கே வந்து எல்லாம் கேட்டுட்டார்... ஆனாலும் இப்படி வந்து பேசுவார்ன்னு நான் எதிர்பார்க்கலை... ரொம்ப சாரி மேடம்..."
அவளுடைய ‘மேடம்’ மழை பாரதியின் புன்னகையை பெரிதாக்கியது...
"அது தான் பரவாயில்லைன்னு சொல்லிட்டேனே மதுமதி..." என்றாள் அதே புன்னகையுடன்.
"அது... அது... வினிதா சொன்னா... நீங்க செகன்ட் இயர் கிளாஸ்ல இருந்தப்போ பிரின்சிபால் உங்களைப் பார்க்க வரச் சொன்னாருன்னு......" என்றாள் மதுமிதா தயக்கத்துடன்.
பாரதி முகத்தில் மீண்டும் பெரிய புன்னகை மலர்ந்தது.