பெற்றோருக்கு ஒரே மகளான கற்பகம், தன் தந்தைக்கு பின் அவரின் மில்லை தானே ஏற்று நடத்தி வந்தாள். நிரஞ்சன், அவளின் மூத்த மகன், தந்தைக்கு உதவியாக இருக்க, விவேகானந்தன், தந்தை தாய் இருவருக்கும் உதவியாக இருந்தான். விவேக்கை விட பத்து வயது சிறியவளான மதுமதி அந்த குடும்பத்தில் எல்லோருக்கும் செல்லம்.
"அவ படிச்சுட்டு இருக்கா அத்தை... சீக்கிரம் வரேன்னு சொன்னா..." என்று கற்பகத்திற்கு பதில் சொன்னாள் நிரஞ்சனின் மனைவி உமா.
"அட நம்ம மது குட்டி இப்படி விழுந்து விழுந்து படிக்கிறாளே.... என்ன விஷயம்?" என்று வினவினார் நரேந்திரன்.
"பெரிசா ஒன்னும் இல்லை மாமா... அவளோட டீச்சர் பாரதி மேடம் அடுத்த கிளாஸ்க்கு எப்போதும் ப்ரிபேர் பண்ணிட்டு வர சொன்னாங்களாம்... அது தான் மது படிச்சுட்டு இருக்கா..." என்றாள் உமா ஓரக் கண்ணால் விவேக்கை பார்த்த படி.
விவேக் அதைக் கவனித்தும் கவனிக்காதது போல் இருந்தான்.
அதற்குள் மது வரவே, அனைவரின் கவனமும் அவள் பக்கம் திரும்பியது.
"என்ன மது இது... இப்படி நேரம் காலம் பார்க்காமல் எல்லாம் படிக்க கூடாது... ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடனும்..." என்றாள் கற்பகம்.
"இதெல்லாம் ரொம்ப ஓவர் அம்மா... ஒரு ரெண்டு நிமிஷம் லேட்டா சாப்பிட வந்தால்... உங்க பொண்ணு அப்படியே ஓய்வே எடுக்காமல் படிக்கிற மாதிரி இல்லை பேசுறீங்க...." என்றான் நிரஞ்சன்.
இப்படியே பேசியபடி உணவருந்த தொடங்கினர். சற்று நேரத்தில் பேச்சு அவர்களின் தொழிலுக்குச் சென்றது. அன்று நடந்த ஒரு மீட்டிங் பற்றி பேசிய கற்பகம்,
"விவேக் பேசினானோ இல்லையோ... எல்லோரும் அமைதி ஆயிட்டாங்க... எதிர் கேள்வி கூட