தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 03 - பிந்து வினோத்
03. கண்கள் முழுதும் உந்தன் கனவே...
ஆஃபிஸ் அட்டென்டன்ட் கோபால் கொண்டு வந்து கொடுத்தப் பேப்பரை வாங்கி படித்த பாரதியின் முகத்தில் சிந்தனைக் கோடுகள் தோன்றின. இருந்தாலும் ஒன்றும் சொல்லாது அதில் இருந்ததை ஏற்றுக் கொண்டதற்கு அறிகுறியாக, தன் கையெழுத்தை போட்டு கோபாலிடம் பேப்பரை திருப்பிக் கொடுத்தாள் பாரதி. கோபால் அங்கிருந்து நகர்ந்தப் பின்,
"என்ன விஷயம் பாரதி?" என்று விசாரித்தாள் பவித்ரா.
"இன்னைக்கு ஈவ்னிங் விஸ்வநாதன் சார் வர்றாராம்... நாலு மணிக்கு மீட்டிங்காம்... கட்டாயம் அட்டென்ட் பண்ணனும்னு பிரின்சிபால் சொல்லி இருக்கார்..."
"ஓ!"
"என்ன விஷயமா இருக்கும், பவி? அது என்ன எனக்கு மட்டும் தனி மீட்டிங்?"
"எனக்கு ஒரு விஷயம் தான் தோணுது... அது சரியான்னு தெரியலை..."
"என்ன?"
"வந்து... ம்ம்ம்... அன்னைக்கு அந்த விவேக் கம்ப்ளைன்ட் பண்றேன்னு சொன்னாரே..."
"ஆனால், அவர் தான் நம்ம பிரின்சிபால் கிட்ட சொன்னாரே..."
"பிரின்சிபால் எதுவும் செய்யலை தானே?"
"ச்சே... அப்படி எல்லாம் இருக்குமா என்ன? அவர் பெரிய பிசினஸ் மேன்... இதெல்லாம் ஞாபகம் வச்சு இவ்வளவு நாள் கழிச்சு செய்வாரா என்ன?"
"தெரியலை பாரு... எதுக்கும் நானும் ஈவ்னிங் ஸ்டே பண்றேன்..."
"ச்சே ச்சே வேண்டாம் பவி... நீயே நித்திலா கூட கொஞ்ச நேரம் தான் ஸ்பென்ட் பண்ற...