ஷிவா, அஸ்வினி இருவரும் தன்னைப் பார்ப்பதை உள்ளுணர்வில் உணர்ந்ததாலோ என்னவோ, அருந்ததி அவர்கள் நின்றிருந்த பக்கம் பார்த்தாள்.
அவளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த கணவனின் பார்வையில் தானாக அருந்ததியின் முகத்தில் மெல்லிய வெட்கம் தோன்றியது.
"ரதி, இங்கே வா, அஸ்வினி உன்னோட பேசனுமாம்!" என்று அவளை அழைத்தான் ஷிவா.
தன்னுடைய அழகிய மனைவியை மிக அருகில் பார்க்கும் ஆர்வம் அவனுக்கு!
இவள் பெயர் ரதியா? ஷிவா கொடுத்த பத்திரிகையில் வேறு பெயர் இருந்ததோ? தன்னுள் கேள்வி கேட்டுக் கொண்டாள் அஸ்வினி.
அருந்ததி ராதிகாவிடம் சொல்லி விட்டு ஷிவாவும், அஸ்வினியும் நின்றிருந்த இடத்திற்கு வர,
"ரதி, நான் சொன்னேன்ல, இவங்க என்னோட வேலை செய்றவங்க. பேர் அஸ்வினி! அஸ்வினி இது தான் என் வைஃப் அருந்ததி" என்று இருவரையும் மீண்டும் அறிமுகம் செய்தான் ஷிவா.
மனதில் பூத்திருந்த வெட்கத்தினால் லேசாக செம்மை படர்ந்திருந்த அருந்ததியின் முகத்தை விட்டு விழிகளை திருப்ப முடியாமல் நின்றான் அவன்.
ஓ! அருந்ததியின் செல்ல சுருக்கமா, ரதி!!!
அஸ்வினிக்கு ஷிவாவின் மீது இப்போது பெரிதாக நாட்டமோ ஆர்வமோ இல்லை என்ற போதும், அவனின் இந்த 'வழிசல்களும்' அருந்ததியின் முகத்தில் மின்னிய மகிழ்ச்சியும் ஏனோ அவளுக்கு வயிற்றெரிச்சலைக் கொடுத்தது.
தான் வயிற்றெரிச்சலுடன் இருக்கும் போது இன்னொருவர் மகிழ்ச்சியுடன் இருப்பதா?
அருந்ததியின் முகத்தில் இருக்கும் அந்த சிரிப்பை நிறுத்த வேண்டும் என அஸ்வினியின்
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.