" நீ யாரையாவது லவ் பண்றியா?"
"ஐயோ நான் யாரையும் லவ் பண்ணல அப்படி எல்லாம் ஒன்னுமில்ல.." என்று அழுதுகொண்டே கூறினாள்.
" ஆனா நான் உன்ன லவ் பண்றேனே!"
அவள் அதிர்ச்சியோடு கண்ணை விரித்து அவனை பார்த்தாள்.
அவன் மெல்லிய புன்னகையோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சில வினாடிகளுக்குப் பிறகு, கையை சிட்டிகை செய்து" ஹலோ, ரஞ்சி குட்டி, இவ்விட நோக்கு, ஈ பூலோகோத்தில்தான் இருக்கியோ?" என்று கேட்டான்.
அவள், நினைவுலகத்துக்கு வந்து வெட்கத்துடன் முகம் சிவந்து தலை குனிந்தாள்.
" இப்ப சொல்லு நீ என்ன லவ் பண்றியா, இல்லையா?” என்று அவன் அவளை ஒரு பிடிவாதக் குரலுடன் அழுத்தமாக கேட்டான்.
அவள் வெட்கத்தில் தலையை வெளிப்புறமாக திருப்பி ரோடை பார்த்துக்கொண்டிருந்தாள்.
நான் இங்க இருக்கேன் ரஞ்சி அந்தப்பக்கம் இல்லை, முகத்தை என் பக்கம் திருப்பி பார்."
அவள் மெதுவாக திரும்பினாள் அவன் புறம், " இப்போ சொல்லு என்னைப் பார்த்து, என்னை விவாஹம் கழிக்க சம்மதமா?" என்று கேட்டான்.
அவள் சரி என்று தலை ஆட்டினாள்.
"நீ வாயை திறந்து என்னை பிடிச்சிருக்கு , கல்யாணம் பண்ணிக்கறேன்னு