Page 11 of 11
மிகுந்த குரோதத்தோடு கிளம்பி சென்றார்.
அவருடைய தொழில் எதிரி ராபர்ட்டின் மகன் மாக்ஸ்வெல் தான் செய்தது என்று தெரிந்ததும், அவன் இருக்கும் இடம் தெரியும் ஆகையால் அங்கு சென்று, அவனையும், அவன் அடியாட்களையும், போலிசில் பிடித்துக் கொடுத்து, இரண்டு மணி நேரத்தில் திரும்பி வந்தார்.
அவன் வந்ததும், டாக்டர் அப்போதுதான் வெளியே வந்தார்.
மாதவனிடம் வந்தவர், "மாதவன், குண்டு வெளியே எடுத்தாச்சு, அவங்க நினைவு திரும்பனும் பார்க்கலாம், " என்று கூறிவிட்டு அவர் திரும்பிச் சென்றார்.
கண்களில் கண்ணீரோடு, கண்களை மூடி உட்கார்ந்தார். .
இரண்டு நாள் ஆயிற்று , அவள் கோமாவில் சென்றுவிட்டாள், என்று டாக்டர் கூறியதும், மாதவன் குலுங்கி குலுங்கி அழுதார்.
தொடரும்