(Reading time: 14 - 27 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

செய்ததும், அவள் மனதில் இருந்த கலக்கமும் தெரியும்? ஒரு நன்றி சொல்லி இருக்கலாம். அவன் என்ன நினைத்திருப்பான்? அடுத்த முறை அவனை பார்க்கும் போது மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால் அவனை எங்கே பார்ப்பது...

  

"குட் மார்னிங் செல்லம்..."

  

னதில் ஓடி கொண்டிருந்த கேள்விகளையும், நினைவுகளையும் மீறி, அம்மாவின் குரல் அவளை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது. இப்பொழுதும் கூட பிரகாசமாக இருக்கும் அம்மாவின் முகத்தை கண்டு அவளுக்கு பெருமையாக இருந்தது. இள வயது அம்மாவின் எழிலைப் பற்றி தந்தை அவ்வப் போது சொல்வது நினைவில் வந்தது. சரவணின் நினைவு வந்த உடனேயே அவளின் முகம் சுருங்கியது. அதை உடனே கண்டு கொண்ட அர்ச்சனா,

  

"என்னடா கண்ணா என்ன விஷயம்?" என்று கேட்டவர், மகளின் கையில் இருந்த பால் அப்படியே இருப்பதை பார்த்து விட்டு ,

  

"பால் கூட குடிக்காமல் அப்படி என்ன சிந்தனை? என்கிட்டே சொல்லக் கூடாதா?" என்றார்.

  

"என்னம்மா உங்க கிட்ட சொல்லாமல் என்ன... பெரிசா எதுவும் இல்லை... நீங்க என்ன இன்னைக்கு லேட்?"

  

"நேத்து நைட் உங்க அத்தைக்கிட்ட பேசிட்டு தூங்க லேட் ஆயிடுச்சு..."

  

"அத்தைக்கு திரும்ப என்ன???"

  

"நீ கேள்வி பட்டதில்லையா இந்து... வேண்டாத மருமகள் எதை செய்தாலும் தப்புன்னு...."

  

"சும்மா நந்தினிக்கு சப்போர்ட் பண்ணாதீங்க அம்மா... ஏன் கீதா அக்கா கூட தான் அப்படி கல்யாணம் பண்ணிகிட்டாங்க ... இப்போ அவங்க மாமியார் அவங்களை அப்படி தலையில வச்சு தாங்குறாங்க.... என்ன செல்லம் கொஞ்சல்ஸ் ன்றீங்க....."

  

அர்ச்சனாவின் முகத்தில் புன்னகை படர்ந்தது...

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.