"இந்து கொஞ்சம் ஒரு மாதிரி... நான் எதுக்கும் அவள் கிட்ட...."
கீதாவை இடை மறித்து சஞ்சீவுக்கு உதவிக்கு வந்தார் காஞ்சனா,
"கீதா.. என் தயங்குற? அவனே இப்போ தான் ஏதோ அதிசயமா கொஞ்சம் திருந்துற மாதிரி இருக்கு... இந்து கிட்ட வேணும்னால் நான் பேசட்டுமா? எனக்கு என்னமோ சஞ்சீவ் சொல்றது சரின்னு தோணுது."
"இல்லை அத்தை.. நானே பேசுறேன்..." என்றாள் யோசனையோடு.
சஞ்சீவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை.
"அண்ணி, ரொம்ப தேங்க்ஸ். சூப்பர் சூப்பர்... அண்ணா நானும் உன் கூட வரேன்... இதோ ஒரு அஞ்சு நிமிஷத்தில ரெடி ஆயிடுவேன்.... நீங்க அதுக்குள்ளே இந்து கிட்ட சொல்லிடுங்க அண்ணி ப்ளீஸ்..." என்றவன் விரைந்து உண்டு முடித்து விட்டு சொன்னது போல் ஐந்து நிமிடத்தில் தயாராகி வந்தான்.
*********
ஆபீஸ் கிளம்பும் முன் கிடைத்த சிறிது நிமிட தனிமையில், ராஜீவ் மனைவியிடம்,
"என்ன ஆச்சு கீதா... ஏதோ ரொம்ப யோசிக்கிற மாதிரி இருக்கு?" என்று விசாரித்தான்.
சிறிது தயங்கிய கீதா...
"நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் ராஜீவ்... சாயந்திரம் சொல்றேன்..." என்றாள்.
"ம்ம்ம்ம்... சாயந்திரம் பேச எங்க நமக்கு டைம் இருக்கு சொல்லு பார்க்கலாம்..."