(Reading time: 14 - 27 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

"சாரி சஞ்சீவ் அலுத்துக்காதீங்க... எங்களுக்கு எல்லாம் இப்படி நீங்க திடீர்ன்னு தொடர்ந்து அதிர்ச்சி கொடுத்தால் பின்ன?" என்றாள் கீதா புன்னகையோடு.

  

"அம்மா, அண்ணா, அண்ணி மூணு பேரும் கேட்டுக்கோங்க... நான் என்னுடைய பிசினஸ் ல இன்னும் கொஞ்சம் interest எடுத்துக்கலாமுன்னு நினைக்கிறேன்... அதுக்கு தான் அண்ணி உங்க உதவி வேணும்...." என்று பொதுவாக ஆரம்பித்து, கீதாவை பார்த்து முடித்தான் சஞ்சீவ்.

  

"என் உதவியா சொல்லுங்க.. கட்டாயம் செய்றேன்..."

  

"வந்து அண்ணி... எனக்கு இந்த பிசினஸ் எல்லாம் வெறும் கேள்வி ஞானம் தான்... அதனால பிசினஸ் ல கொஞ்சம் அனுபவம் இருக்குறவங்க யார் கிட்டயாவது போய் இன்னும் கொஞ்சம் என்னோட நாலேட்ஜ் வளர்துக்கலாமுன்னு பார்க்கிறேன்....."

  

"நல்ல விஷயம் தான்... ஆனால் நான் என்ன செய்யணும்" என்றாள் கீதா குழப்பத்துடன்.

  

"நேத்தைக்கு உங்க ஃபிரெண்ட் இந்துவோட ஆபீஸ் பார்த்தோம் இல்லை... ரொம்ப நல்லா இருந்துச்சு.. அவங்க எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவாங்களா?"

  

கீதா உண்மையில் திகைத்து தான் போனாள். அவள் இதை எதிர்பார்க்கவில்லை. கூடவே இந்துவை பற்றி அறிந்திருந்ததால் தயங்கினாள்...

  

"இந்துவா???? நீங்க பேசாமல் உங்க அண்ணா கிட்ட கத்துக்கலாம் இல்லை? அவரும் பிசினஸ் தானே செய்றார்.... "

  

"அண்ணி அண்ணா நடத்துறது விளம்பர ஏஜென்சி... அது வேற மாதிரியான பிசினஸ் என்னுடையது வேற மாதிரி... அதனால உங்க ஃபிரெண்ட் கொஞ்சம் ஹெல்ப் செயதால் நல்லா இருக்கும்..."

  

கீதா இப்போதும் தயங்கினாள்...

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.