"காஞ்சனாவுக்கு கீதாவை பத்தி நல்லா தெரியும் உண்மையான பிரச்சனை ஈகோ தான். ஆனால் கீதா விட்டுக் கொடுத்து நடந்த உடனே இப்போ காஞ்சனாவுக்கு மனசு குறுகுறுக்குது அதனால் தான் இந்த செல்லம் எல்லாம்....உங்க அத்தை விஷயம் வேற.... அவங்களுக்கு நந்தினியோட அம்மாவை பத்தி பேசாட்டி பொழுது போக மாட்டேங்குது... உனக்கும் தெரியும் தானே அவங்க அம்மா ஒரு divorcee....."
இதை சொல்லும் போதே அர்ச்சனாவின் முகத்தில் சிந்தனை படர்ந்தது...
"தெரியும் அம்மா... ஆனால் அத்தைக்கு அதனால என்ன வந்தது?"
"ம்ம்ம் ... என்ன சொல்றது கல்பனா அத்தைக்கு நந்தினிக் கிட்ட ஏதாவது தப்பு கண்டு பிடிக்கணும்.... அது முடியலை.... அதனால அவளோட வீக் பாயிண்டை எப்பவும் எடுத்து யூஸ் பண்ணிக்கீறாங்க... நந்தினியும் அவ அம்மா பத்தி தப்பா சொன்னால் எப்படி சும்மா இருப்பா? "
இந்து பதில் எதுவும் சொல்லவில்லை.
"என்னடா என்ன ஆச்சு?"
"எனக்கு எதுக்கு அம்மா காலையிலேயே இந்த விஷயம் எல்லாம்... நான் போய் ஆபீஸ் கிளம்புறேன்...."
"சரிடா நானும் கிளம்பனும்... சொல்ல மறந்திட்டேனே கீதா போன் செய்தாள்..."
"அக்காவா எப்போ?"
"கீதா பண்ணலை, ராஜீவ் பேசினார்... உனக்கு ஏத்த மாதிரி ஒரு பையன் இருக்கான்னு சொன்னார்... டீடைல்ஸ் கொடுத்து அனுப்புறேன்னு சொன்னார்... அப்போ கீதாவும் பேசினாள்..."
"ஓ... இது தேவை இல்லாத வேலை அம்மா... எனக்கு கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணும்