"அது சரி அப்படி என்ன சார் இன்னைக்கு முக்கியமான வேலை?"
அவன் பதில் சொல்வதற்குள் அங்கே வந்த ராஜீவ்,
"கீதா டிபன் ரெடியா?" என்றான். அப்போது தான் அங்கே இருந்த தம்பியை பார்த்தவன்,
"என்னடா அதிசயம்... இன்னைக்கும் யாரவது விசிட்டர்ஸ் வராங்களா என்ன?" என்றான்.
"அதெல்லாம் இல்லை அண்ணா... வாங்க நாம டைனிங் டேபிளில் உக்கார்ந்துப் பேசுவோம்...."
"இருடா...." என்ற சஞ்சீவ், சமையல் அறை சென்று அங்கு தயாராக இருந்த இட்லியையும், சட்னியையும் எடுத்துக் கொண்டு நடந்தான்.
ஆச்சர்யப்பட்ட சஞ்சீவைப் பார்த்து புன்னகைத்தாள் கீதா. அண்ணனை தொடர்ந்த சஞ்சீவ்,
"ஏன் அண்ணா அண்ணியோ கலாவோ எடுத்துட்டு வர மாட்டாங்களா என்ன... நீங்க ஏன்???" என்றான்!
டேபிளில் தன் அருகில் அமர்ந்த மனைவியை பார்த்து கண் சிமிட்டிய ராஜீவ்...
"டேய் இதெல்லாம் சின்ன adjustmentsன்னு வச்சுக்கோ... உங்க அண்ணி வீட்டில உங்க அண்ணி சமையல் அறை பக்கமே போனதில்லை... ஆனால் இங்கே அவ தான் எல்லாமே செய்யுறா... அதனால ஏதோ என்னால முடிஞ்ச உதவின்னு வச்சுக்கோ...."
அப்போது அங்கே காஞ்சனாவும் வர, அந்த பேச்சு அத்தோடு நின்றது. அனைவருக்கும் பரிமாறி விட்டு கீதாவும் உண்ண அமர்ந்த பின், காஞ்சனா,
"இன்னைக்கு என்னடா சஞ்சீவ்? எங்க போற?" என்றார் சந்தேகமாக.
"என்ன அம்மா... நீங்க மட்டும் தான் பாக்கி நீங்களும் கேட்டாச்சு... ச்சே..."