ரொம்ப பிகு பண்ணிக்குவீங்க?" என்றபடி லேப்டாப்பை மூடி அருகில் இருந்த மேஜையில் வைத்து விட்டு, மனைவி அமர இடம் கொடுத்து தள்ளி அமர்ந்தான் ராஜீவ்.
"ரொம்ப பேசாதீங்க... இன்னைக்கு நான் ரொம்ப முக்கியமான விஷயம் பேசனும்.... அதனால தான் வேலையை எல்லாம் பாதியிலேயே விட்டுட்டு வந்தேன்..." என்றபடி அவன் அருகில் அமர்ந்த கீதாவின் கைகளை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்டான் ராஜீவ்.
"ஆமாம், காலையிலே கூட சொன்ன... என்ன விஷயம்? ஆனால், எதுவாக இருந்தாலும் உனக்கு பத்து நிமிஷம் தான்... அதுக்கு அப்புறம் நான் சொல்றதை தான் நீ கேட்கனும்....." என கண் சிமிட்டியவாறு ராஜீவ் சொல்லவும், கீதா அவனின் தலையில் செல்லமாக கொட்டினாள்!
"முக்கியமான விஷயம்னு சொல்றேன்...." என்று கீதா சொல்லும் போதே, அவளின் பேச்சில் குறுக்கிட்டு அவளின் மொபைல் ஃபோன் அழைத்தது.
ராஜீவ் மனைவியின் ஃபோனை கையில் எடுத்தான். அழைப்பது வீணா என்பது புரியவும்,
"உன் ஃபிரெண்ட் வீணா கூப்பிடுறா... ஞாபகம் வச்சுக்கோ, உனக்கு வெறும் 10 மினிட்ஸ் தான் டைம் இருக்கு..." என்று மனைவியிடம் சொன்னான் ராஜீவ்.
உதட்டை சுழித்து விட்டு, அவனிடம் இருந்து ஃபோனை வாங்கிக் கொண்டு, பால்கனி சென்று பேசினாள் கீதா.
"ஹலோ வீணா... சொல்லு... நானே உனக்கு ஃபோன் பண்ணனும்னு தான் நினைச்சேன்..."
"அது தான் கீதா அக்கா வீணா ஸ்பெஷல்!!! நீங்களோ, இந்துவோ பேசனும்னு நினைத்தாலே போதும், உடனே நான் ஃபோன் போட்டுடுவேன்..... அப்புறம் அக்கா, இந்த வீக் என்ட்ல எங்கேயாவது வெளியே போகலாமா? உங்களுக்கு ஓகே'ன்னா நான் இந்துவை கேட்பேன்..."
"சனி, ஞாயிறுன்னா கஷ்டம் தான், வீணா. வெள்ளிக் கிழமைன்னா ஓகே..."