”இந்த கோலத்தில என்னால உன்னை திட்டகூட முடியலை, அதுக்குதான் சொன்னேன், நான் ஒண்ணும் உன்மேல ஆசைப்பட்டு சொல்லலை” என்றாள் அதைக்கேட்டு அவன் சுற்றி முற்றிப் பார்த்தான், அனைவருமே குழம்பியிருந்தார்கள்
”என்னை திட்டப்போறியா”
”ஆமாம்”
”நான் என்ன தப்பு செய்தேன்”
”சொல்றேன் முதல்ல உன் பழைய கோலத்தில வந்து நில்லு போ” என விரட்ட அவனோ ஆச்சர்யத்துடன் கணக்கு பிள்ளையை பார்க்க அதற்குள் அவன் உடையுடன் தயாராக இருந்தான்
”என்னடா நான் சொல்லாமலே துணியோட வந்து நிக்கற”
”உன் முறை பொண்ணை பார்த்த உடனே தெரிஞ்சிக்கிட்டேன், இனிமேல உன் பேச்சு எங்கேயும் செல்லாதுன்னு, எப்படியும் அடுத்து நான் அவங்ககிட்டதான் வேலை செய்யனும் போல, அதான் இப்ப இருந்தே அவங்களுக்கு காக்கா பிடிக்கிறேன்”
”போடா அரைக்கிறுக்கு, காக்கா பிடிக்கிறானாம் காக்கா கொடு அந்தத் துணியை”
”அந்த பக்கம் மோட்டார் ரூம் இருக்கு அங்க போய் மாத்திக்க”
”எல்லாம் எனக்குத் தெரியும் நான் வர்றதுக்குள்ள அவள்கிட்ட பேசி என்ன ஏதுன்னு கேட்டு வை”
”ஏன் நீயே வந்து கேட்டுத் தெரிஞ்சிக்கயேன்”
”இவளை பார்த்து பேச முடியலை”