(Reading time: 24 - 48 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”எங்கப்பா போட்டு கொண்டு வந்து என்கிட்ட கொடுத்தாரு”

  

”அவருக்கு இருக்கற நல்ல மனசுகூட உங்களுக்கு இருக்கா, அவர் பெத்த புள்ளையா நீங்க இப்படி கல்நெஞ்சுக்காரரா இருக்கீங்களே”

  

”ஏன் சொல்ல மாட்ட, சமையலே தெரியாம இருக்கியே பொம்பளை புள்ளதானே கொஞ்சமாச்சும் சமையல் கத்து வைச்சிருக்க கூடாதா“

  

”என்ன செய்றது கொம்பா, என்னை மகாராணி போலவே செல்லமா எங்கப்பா வளர்த்துட்டாரா, இந்த வீட்லயும் எல்லாத்துக்கும் வேலைக்காரங்க இருக்காங்களா அதனால நான் சமைக்கனும்ங்கற அவசியம் வந்ததில்லை”

  

”இதெல்லாம் வக்கனையா பேசு, உன்னை உங்கப்பா செல்லமா வளர்க்கலை திமிரா வளர்த்து வைச்சிருக்காரு”

  

“அப்படியா இல்லையே”

  

”என்ன நொள்ளையே ஏய் இந்தா காபி குடிச்சித்தொலை, எனக்கு வேலைகிடக்கு நான் கிளம்பறேன்”

  

”வேலையா என்ன வேலை, எங்க போறீங்க” என கேட்டபடியே காபியை வாங்கிக் கொண்டாள் காவேரி

  

”வேற எங்க வழக்கமான என் இடத்துக்குதான், நாய்களுக்கு டிரையின்ங் தரனும்ல” என சொல்ல அவளோ காபியை ஒரு வாய் பருகி அவன் சொன்னதைக் கேட்டு அப்படியே துப்பினாள் அது அவளின் நைட்டி முழுவதும் பரவியது.

  

”ஒரு காபியை ஒழுங்கா குடிக்கறாளான்னு பாரு” என திட்ட அவளோ

  

”காபியா இது ஆறிப்போய் இருக்கு, இதை எப்படி குடிக்கறது போ போய் வேற காபி

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.