(Reading time: 7 - 13 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

ப்ளீஸ்..."

  

"நீ இப்படி கொஞ்சுற மாதிரி கெஞ்சினால் எப்படி நான் நோ சொல்றது... உனக்கு வேண்டிய டைம் எடுத்துக்கோ. ஆனால்... என் பொறுமையை ரொம்ப சோதிக்க கூடாது. சரியா...??"

  

சரி என மகிழ்ச்சியோடு தலை ஆட்டினாள் இந்து.

  

அவள் நெற்றியில் விழுந்த கற்றை முடியை விலக்கிய சஞ்சீவ், கைகளை எடுக்க மனம் இல்லாதவன் போல், அவளின் பட்டு கன்னத்தை மெதுவாக வருடினான்.

  

இந்துவின் திகைத்தப் பார்வையை பார்த்து விட்டு, அவசரமாக கைகளை எடுத்தவன்,

  

"என் பொறுமையை அதிகமா சோதிக்க கூடாது இந்து... அப்புறம் நான் பழைய ராஜா கதையில வர மாதிரி உன்னை கடத்திட்டுப் போய் கல்யாணம் செய்ய வேண்டியதாகிடும்..." என்றான்.

  

"ஓஹோ... என்னை கடத்திட்டுப் போறது அவ்வளவு சுலபமாக்கும்...!!! நான் கராத்தேவில் ப்ளாக் பெல்ட்..."

  

"நல்ல வேளை இப்போதே சொன்ன... இனி மேல் நீ என்ன சொன்னாலும் நான் ஆமாம் போட்டு பழகிக்கிறேன்... எனக்கு கராத்தே அடி எல்லாம் வாங்க ஆசை இல்லை..."

  

சஞ்சீவ் பயப்படுவது போல் பாவனை செய்து சொன்னதை கேட்டு மனம் விட்டு சிரித்தாள் இந்து.

  

🌼🌸❀✿🌷

   

ந்துவின் வீட்டை அவர்கள் அடைந்தப் போது மணி 9.30 ஆகி இருந்தது. கேட்டின் முன் காரை நிறுத்த சொன்ன இந்து,

  

"வாட்ச்மேன் இன்னைக்கு லீவ்... அதனாலே நான் இங்கேயே இறங்கிக்கிறேன்...." என்றாள்.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.