(Reading time: 36 - 72 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”என்ன நம்ம கொம்பனா வீட்டை விட்டு ஓடினது, இது தப்பாச்சே, என்னதான் பிரச்சனை வந்தாலும் அதுக்குன்னு இப்படியா, எந்த வீட்லதான் பிரச்சனை இல்லாம இருந்திருக்கு, பிடிக்காத கல்யாணம்னாலும் கொஞ்ச நாள் போனா தன்னால பிடிச்சிப்போயிடும், அதுக்குன்னு இப்படி அவசரப்படலாமா, இதனால யாருக்கு நஷ்டம், இரண்டு வீட்டுக்கும்தானே மானக்கேடு, அதைப்பத்தி யோசிக்காம சின்னபிள்ளை போல நடந்துக்கிட்டா எப்படி இது தப்பில்லையா” என ஆளாளுக்கு வாய்க்கு வந்ததை பேசி வைக்க அதைக்கேட்ட கொம்பனுக்கு அவமானமாக இருந்தது காவேரி அவன் முன் வந்து

  

”கொம்பன்” என மெதுவாக அழைக்க அவனோ

  

”என்னை மன்னிச்சிடு” என கைகூப்பி மன்னிப்பு கேட்டான் அவள் ஆச்சர்யப்பட்டாள் சண்முகமோ தன் மகளிடம்

  

”என்னம்மா பார்க்கற, மாப்பிள்ளையே இறங்கிவந்து மன்னிப்பு கேட்கறாரு நீ ஏன் பிடிவாதமா இருக்க, ஏதோ தெரியாத்தனமா தப்பு செய்துட்டாரு, இந்த முறை மன்னிச்சிடும்மா அடுத்த முறை இது போல சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டு போக மாட்டாரு, எனக்கு அவர்மேல நம்பிக்கையிருக்கு என்னை நம்பு, அவரை மன்னிச்சிடும்மா” என சொல்ல அவளும் பெருந்தன்மையாக

  

”உன்னை நான் மன்னிச்சிட்டேன் கொம்பா” என சொல்ல கொம்பன் அமைதியாக காவேரியின் அறைக்குள் சென்று படுத்துவிட்டான். அந்த படுக்கையில் இருந்த அலங்காரம் அப்படியே இருந்து, அது அவனுக்கு வெறுப்பையே தந்தது கண்கள் மூடினான் நேற்று இரவு நடந்தது ஒவ்வொன்றாக வந்து சென்றது காவேரி மெதுவாக அந்த அறைக்குள் வந்து கொம்பன் என்ன செய்கிறான் என பார்த்தாள் அவனோ கண்கள் மூடியபடி இருக்க

  

”கொம்பா“ என அழைத்தாள் அவனோ மெல்ல கண்கள் திறந்து

  

”என்ன” என்றான்

  

”காபி” என இழுக்க அவனோ நொந்துப் போய் எழுந்து அமர்ந்து அவளை ஒரு அழுத்தமான

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.