Page 17 of 31
”ஆமாம்”
”நீயே போட்டதா”
”ஆமாம் பிடி”
”உனக்கு காபி”
”எனக்கு வேணாம் பசிக்கலை” என சொல்ல அவளோ ஆர்வமாக அந்த காபியை வாங்கினாள் சுட சுட கொண்டு வந்திருந்தான்
”காபி சூடா இருக்கு” என சொல்லியபடியே அவனைப் பார்க்க அவனோ சூடு பட்ட கையை பார்த்தபடி நின்றான். அவனது கையில் இருந்த சூட்டைக்கண்டு பதறினாள் காவேரி
”அய்யோ என்னாச்சி எப்படி சூடுபட்டது”
”அம்மா எனக்கு சூடு வைச்சாங்க”
”ஏன் எதுக்காக சூடு வைக்கனும்”
“வீட்டை விட்டு யார்கிட்டயும் சொல்லாம வெளிய போனேன்ல அதனால சூடு வைச்சிட்டாங்க” என சொல்ல அவளோ காபி டம்ளரை ஒரு இடத்தில் வைத்துவிட்டு அவனது கையை பிடித்துப் பார்த்தாள் அவனோ பதறி விலக முயல அவளோ முறைத்தாள்
”கையை விடு”
”ஏன்”
”உனக்குதான் பிடிக்கலையே”