(Reading time: 36 - 72 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”சரி சரி இது ஒண்ணு மட்டும்தான் வீட்டுக்கு காவல்ன்னு சொன்னதால ஒத்துக்கறேன் அவ்ளோதான்” என சொல்ல அவன் மிகுந்த சந்தோஷமடைந்தான் மகிழ்ச்சியில் அவளை இழுத்து ஒரு அணைப்பு அணைத்துவிட்டு விலகி தன்னையே சுற்றி வந்த நாயை தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சி மகிழ்ந்தான்.

  

அவனது அணைப்பில் சொக்கிப் போன காவேரியோ கொம்பனின் மடியில் கிடந்த நாயின் முதுகை தடவிக் கொடுத்தாள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாயை கண்டித்தான் கொம்பன். அப்படியே அதை தூக்கிக் கொண்டு பைக்கில் ஏறியவன் நேராக சென்றது காவேரியின் வீடுதான் அதன்பின்னே மற்றவர்கள் வந்தார்கள். கொம்பன் சொன்னது போலவே அந்த நாயைக் காவலுக்கு என கட்டிவைத்தான் அதுவும் பாசமாக பார்த்து வைத்தது, அதைக்கண்ட காவேரிக்கு மனம் லேசானது. கொம்பனுக்கு உற்சாகமாக இருந்தது, அந்த நாயுடன் சிரித்து பேசிக் கொண்டிருக்க அதுவும் அவனுடன் நன்றாக ஒட்டிக் கொண்டது. இருவருக்கும் இடையில் இருக்கும் அன்பைக் கண்டு ஆச்சர்யப்பட்டாள் காவேரி.

  

அன்றைய நாள் முழுவதும் அந்த நாயுடனே பொழுது ஓட்டினான் கொம்பன், அடிக்கடி அவளும் கொம்பனை தேடிவந்து கிண்டல் செய்தபடி இருக்க அவளை அடிக்கடி பார்த்ததாலயே அந்த நாய்க்கும் அவளை பிடித்திருந்தது, அவள் வந்தாலும் பாசமாக வாலாட்டி நின்றது அதில் அவளுக்கும் அந்த நாயை மிகவும் பிடித்துவிட்டது, இரவு உணவு சமைத்து முடித்ததும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்கள், அதிலும் கொம்பன் முதலில் நாய்க்கு உணவு அளித்துவிட்டு வந்து சாப்பிடலானான், அவனது பாசத்தைக் கண்ட காவேரியும் சண்முகமும் மனதுக்குள் மெச்சி கொண்டார்கள்.

  

தொடரும்...

Go to Indru nee naalai naan story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.