Page 22 of 31
”அப்படியா”
”அவள் மட்டுமில்லை எல்லாரும் உன்னைத்தான் பார்க்கறாங்க“
”எல்லாருமா”
”ஏன்”
”யாருக்குத் தெரியும் தலையை தூக்கிப் பாரு” என சொல்ல சட்டென தலையை தூக்கிப் பார்த்தான் அனைவருமே அவனையே பார்க்க குழம்பினான்
”எதுக்கு என்னையே பார்க்கறீங்க எல்லாரும்”
”உனக்காக என் மருமகள் பட்டினி கிடக்கனுமா”
”நான் என்னம்மா செய்தேன்“
”நீ வந்தாதான் அவள் சாப்பிடுவா போல வா வா” என அழைக்க
”ஆமா இதுல மட்டும்தான்” என புலம்ப
”என்னடா உளர்ற”
”ஒண்ணுமில்லை வாங்க போலாம்” என சொல்ல அனைவருமே சென்றார்கள் காவேரியோ வேண்டுமென்றே அவன் பக்கம் நடந்துவர அவனோ
”தள்ளி வா”
”ஏன்”