(Reading time: 36 - 72 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

நினைச்சி இவ்ளோ வருத்தப்படறியே, எங்கம்மா போனப்ப நான் எவ்ளோ வருத்தப்பட்டிருப்பேன், அவங்க உன்கிட்ட என்ன கேட்டாங்க சொத்து கேட்டாங்களா இல்லை பணம் நகைன்னு கேட்டாங்களா எதுவும் இல்லை, என்னை கல்யாணம் செய்துக்கச் சொல்லி கேட்டாங்க, அவங்களை மதிக்காம கண்டபடி பேசி விரட்டினதால அவங்க மனசு உடைஞ்சி போய் உடம்பு முடியாம போய் இறந்துட்டாங்க அதுக்கு காரணம் நீதானே, அப்பவே உனக்கு தண்டனை கிடைச்சிருக்கனும் என்னவோ கடவுள் உன்னை காப்பாத்திக்கிட்டே வந்தாரு ஆனா, இப்ப பாரு என் மூலமா உனக்கு தண்டனை கிடைச்சிருக்கு அனுபவி” என சொல்ல அவனோ அவளை விந்தையாகப் பார்த்தான்

  

”தப்புதான் உங்கம்மா வந்து என்கிட்ட பலமுறை கெஞ்சினப்ப எனக்கு அந்நேரம் சந்நியாசியாகனும்ங்கற லட்சியம் மட்டுமே இருந்தது, மேற்கொண்டு நான் எதையுமே யோசிக்கலை ஆனா இப்ப அன்னிக்கு நடந்ததை நினைச்சா மனசு கனக்குது”

  

”எப்படியோ செய்த தப்பை நீ உணர்ந்தியே சந்தோஷம் சரி சரி வா வீட்டுக்கு போலாம் அங்க என்ன பார்வை எவ்ளோ பார்த்தாலும் ஒண்ணும் நடக்காது கிளம்பு” என சொல்ல கொம்பனுக்கு கஷ்டமாக இருந்தது ஆனாலும் வேறு வழியில்லையே, அதனால் அவளுடன் வீடு செல்வதற்கு திரும்ப ஒரே ஒரு நாய் மட்டும் யாருக்கும் அடங்காமல் தப்பித்துக் கொண்டு நேராக கொம்பனிடம் வந்து அவனது காலை சுற்றிக் கொண்டது அதைக்கண்ட காவேரியோ அதிர கொம்பனோ

  

”இவன் உன்னை எதுவும் செய்ய மாட்டான் பயப்படாத பாவம் நான்னா இவனுக்கு உசுரு அதான் என்னை விடமாட்டேங்குது” என சொல்ல அதற்குள் ஆட்கள் வந்தார்கள் அந்த நாயை பிடிக்க முயல அதுவோ ஈனமாக அழ ஆரம்பித்தது. அந்த அழுகுரல் கேட்டு காவேரியின் மனது இளகியது. கொம்பனோ அவளிடம் கெஞ்சினான்

  

”இந்த ஒரு நாயை மட்டும் விட்டுடு பாரு பாவம் எப்படி அழுகுது பாரு, இதை மட்டும் நான் வளர்த்துக்கிறேன் நம்ம வீட்டுக்கு இது காவலா இருக்கும் ப்ளீஸ்” என கைகூப்பியே விட்டான் அந்த நாய் கூட காவேரியின் முன் கண்ணீர் மல்க மண்டியிட்டு நிற்க அவளுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.