என சொல்லி அழைக்க கணக்குபிள்ளையும் சரியென அவனுடன் சேர்ந்துக் கொண்டான். இருவரும் வரவும் அங்கிருந்த நாய்கள் உற்சாகத்தில் குலைத்தன அவைகளை பாசமாக வருடியபடியே ஒவ்வொரு நாய்க்கும் அதற்கு ஏற்ப சாப்பாடு தர ஆரம்பித்தார்கள் இருவரும் அதற்குள் காரில் வந்து இறங்கினார்கள் கொம்பனின் பெற்றோரும் காவேரி மற்றும் சண்முகமும்.
அதை கணக்குபிள்ளை பார்த்துவிட்டு கொம்பனுக்கு எச்சரிக்கையும் செய்தான் கொம்பனும் வந்தவர்களைக் கண்டு நொந்துக் கொண்டான். அவர்களோ அவ்விடம் வர முயல நாய்கள் அவர்களைப் பார்த்து குலைத்தே தடுத்தது. அவைகளுக்கு புதியவர்களை கண்டால் பிடிக்காது அதனால் மற்றவர்கள் நின்றுவிட காவேரி மட்டும் துணிச்சலுடன் நடந்து முன்னேறினாள் அவளைப் பார்த்தும் நாய்கள் குலைத்தன அதைக்கண்ட கொம்பன்
“ஏய் வராத நாய் குலைக்குதே தெரியலை வராத”
”குலைக்கற நாய் கடிக்காது உன்னைப் போல” என்றாள்
”சில சமயம் குலைக்கற நாய் கடிச்சிடும், ஆபத்தை விலைகொடுத்து வாங்காத அப்படியே திரும்பி போயிடு”
”முடியாது நீ என்னை அதிகாரம் செய்யாத”
”இதப்பாரு பாவம் இதுங்க சாப்பிடாம இருக்குதுங்க, பசியில வேற இருக்குதுங்க நீ பாட்டுக்கு வராத அப்புறும் அதுங்க உன்னை கடிச்சி சாப்பிடும்”
”ஓ மனுஷங்களை சாப்பிடறதுக்கு கூட நீங்க ட்ரெயினிங் தந்திருக்கிங்களா”
”அப்படியில்லை சொன்னா புரிஞ்சிக்க” என அவன் சொல்லும் போதே ஒரு வேட்டை நாய் நான்கு கால் பாய்ச்சலில் காவேரியை நோக்கி குலைத்தபடியே ஓடிவர அந்தச் சத்தம் கேட்டு அவள் திரும்பி பார்த்து அதிர்ந்து ஆஆஆ என பயத்தில் அலற மின்னல் வேகத்தில் கொம்பன் காவேரியின் முன் வந்து நின்றான். அவனைக்கண்டதும் வேகமாக ஓடிவந்த நாய் சட்டென நின்று என்னவென முறைத்துப் பார்க்க அவனோ