வந்த இந்த வீட்டையே இடிச்சி தரைமட்டமாக்கிடுவேன் கிளம்புடா இங்கிருந்து, அவனவன் கல்யாணம் ஆனதும் எப்படி வாழறான் நீயும் இருக்கியே கல்யாணம்ங்கறது படுக்கை சுகத்துக்கு மட்டும் இல்லை அதை நீ என்னிக்கு புரிஞ்சிக்கப் போறன்னு தெரியலை, முதல்ல மனசை கட்டுப்பாட்டுல வைச்சிக்க போய் என் மருமகள்கூட சந்தோஷமா வாழற வழியைப் பாரு, அவளுக்கு பிடிக்காத காரியம் எதையாவது நீ செய்த இந்த முறை உனக்கு சூடுதான் வைச்சேன் அடுத்த முறை எனக்கு நானே சூடு வைச்சிக்குவேன்”
”அய்யோ அம்மா”
”ஆமாம் உன்னை இப்படி தப்பான முறையில வளர்த்ததுக்கு தண்டனையா நானே சூடு வைச்சிக்கிறேன்” என சொல்ல அவனோ தலைகுனிந்தான்.
இருவருமாக சேர்ந்து அவனை அழைத்துக் கொண்டு காவேரியின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கு அவளோ கொம்பன் சென்றதை நினைத்து வருந்தினாள். சண்முகமும் காவேரியின் வாழ்க்கையில் மறுபடியும் மறுபடியும் கஷ்டங்கள் வருவதை எண்ணி வருந்தினார். இருவரும் வருத்தமாக இருந்த நேரம் கொம்பன் தன் தாய் தந்தையுடன் அந்த வீட்டிற்கு வந்தான் மருமகன் வந்த பின்புதான் சண்முகத்திற்கு உயிரே வந்தது ஓடிச் சென்று கொம்பனை அணைத்துக் கொண்டு
”மாப்பிள்ளை இப்படியெல்லாம் என்னை பயமுறுத்தாதீங்க, நான் வயசானவன் இப்பவோ அப்பவோன்னு இருக்கேன், என் பொண்ணு சந்தோஷமா இருக்கறதை பார்த்துட்டு கண்ணை மூடலாம் இருக்கேன் ஆனா, நீங்க செய்றதைப் பார்த்தா என் பொண்ணு கஷ்டப்படறதை பார்க்க முடியாம கண்ணை மூடிடுவேன் போல இருக்கு, உங்களுக்குள்ள என்ன பிரச்சனை நடந்ததுன்னு எனக்குத் தெரியாது அது எதுவா இருந்தாலும் சரி, இப்படியா வீட்டை விட்டு போவீங்க ஊர்க்காரங்க என்ன நினைப்பாங்க, இந்த வீட்டு மானம்மரியாதை என்னாகிறது, பிடிச்சாலும் பிடிக்காம போனாலும் என் பொண்ணுதான் உங்க மனைவி, அதை மட்டும் உங்க மனசுல வைச்சிக்குங்க, இதுபோல இன்னொரு முறை வீட்டை விட்டு போயிடாதீங்க வாங்க உள்ள வாங்க“ என கைபிடித்து இழுத்து உள்ளே அழைத்துச் சென்றார் அதற்குள் ஊரே அந்த வீட்டு முன் கூடிவிட்டது