”ஆமாம் மறுபடியும் என்னை நீ சொந்தமாக்கிக்க ஆசைப்பட்ட நானே அருவாளால என் கழுத்தறுத்துக்கிட்டு செத்துடுவேன்” என்றாள் உறுதியாக
அவனது மோகத்தீ சுடர் விட்டு எரியும் நேரம் அவளின் அந்தப் பேச்சு கேட்டு அந்த தீ மெதுவாக அணைந்து போனது. அவனிடம் இப்போது அமைதி நிலவியது. படுக்கையை விட்டு எழுந்தான் அவளை கண்கொண்டு பார்க்க முடியவில்லை, காவேரியோ நிம்மதியாகி படுக்கையில் படுத்தாள். மெல்ல கண்கள் மூடினாள், தனது தவறுதானே இது, தான் அவனை அணைத்ததால்தானே அவனும் தன்னை அணைத்தான் என நினைத்து வருந்தினாள்.
அவனை பார்க்க பிடிக்கவில்லை ஆனாலும் கற்பனையில் கூடி குலவியது அவளுக்கு சிலிர்ப்பாக இருந்தது. அந்த சிலிர்ப்புடனே கண்கள் திறந்துப் பார்க்க அவன் அங்கு இல்லை கதவு திறந்திருக்க அதிர்ந்தாள். அவசரமாக எழுந்து வெளியே செல்ல அங்கு யாருமே இல்லை குழப்பத்துடன் கொம்பனை அங்கு இங்கு தேட கொல்லைப்புறம் பக்கம் விளக்கொளி தெரியவும் என்னவென சென்று பார்த்தாள். அங்கு கொம்பனோ துணி துவைக்கும் மேடையில் அமர்ந்திருக்க கணக்குபிள்ளையோ கிணற்றில் இருந்த நீரை இறைத்து இறைத்து அவனுக்கு ஊற்றிக் கொண்டிருந்தான். நான்கைந்து முறை தண்ணீரில் குளித்த பின்னரே அவனுக்கு சற்று நிம்மதியானது அவன் எழுந்து வருவதைக்கண்டு அவசரமாக தன் அறைக்குச் சென்று படுக்கையில் படுத்தாள் காவேரி.
கொம்பனும் வந்தான் நொந்தபடியே அவளையே வெறித்துப் பார்த்தான், அவள் உறங்கிவிட்டாள் என நினைத்துக் கொண்டு அவளது காலடியில் அமர்ந்தபடி பேசினான்
”இந்த கொம்பனையே ஒரு நொடியில சாச்சிட்டியே, பெண் வாசம் அறியாத எனக்கு உன் வாசத்தால கட்டிப்போட்டியே, சந்நியாசியாக வேண்டியவனை உன் காலடியில விழவைச்சிட்டியே, ஆம்பளைங்கற ஆணவத்தில இருந்த என்னோட கர்வத்தை உன்னோட ஒரு அணைப்புல சுக்குநூறா உடைச்சிட்டியே, பிடிக்காத கல்யாணம்னாலும் நீ என் பொண்டாட்டிங்கற எண்ணம் இல்லாம இருந்தேன், உன்னை நான் கட்டிப்பிடிச்ச பின்னாடிதானே உணர்ந்தேன், இன்பம்னா என்னன்னு சந்நியாசியானா முக்தி கிடைக்கும்னு