(Reading time: 36 - 72 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”ஆமாம்”

  

”உன் இடத்தில இருந்து பார்க்கறப்ப தப்பு உன்மேல இல்லை ஊர்க்காரங்க செய்த தப்பு உன் மேல விழுந்திருக்கு ஆமா நீ ஏன் ஊர்க்காரங்களுக்கு உதவி செய்த”

  

”உதவி செய்றது தப்பா“

  

”தப்பில்லை உனக்காக ஊர்காரங்க இந்தளவுக்கு இறங்கி வராங்களே அதுக்குச் சொன்னேன்”

  

”எப்படியும் சந்நியாசி ஆகப் போறேன், போறப்ப நாலு பேருக்கு நல்லது செய்யலாம்னு தோணிச்சி செய்தேன், அவ்ளோதான் அதோட சின்னப்ப இருந்தே உதவி செய்றது என்னோட பழக்கமாயிடுச்சி அது வளர வளர அதிகமாச்சே தவிர குறைலை”

  

”அப்ப யாருக்கு என்ன உதவின்னாலும் நீ செய்வ அதானே“

  

”ஆமாம்”

  

”உயிரை கொடுத்து செய்வியா”

  

”ஆமாம் ஏன் உனக்கு ஏதாவது உதவி வேணுமா கேளு செய்றேன்”

  

”உன்னால அது முடியாது”

  

”முடியாதுங்கறது என்னோட அகராதியிலயே இல்லை“

  

“ஓ அப்படியா சரி எழுந்து என் பக்கத்தில வந்து படு” என சொல்ல அடித்துப்பிடித்து எழுந்தான் கொம்பன்

  

”என்ன சொன்ன இப்ப”

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.