(Reading time: 36 - 72 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”உனக்கு கேட்டிச்சின்னு எனக்குத் தெரியும் வந்து படு” என சொல்லியவள் படுக்கையில் படுத்து அவனுக்கென இடமும் ஒதுக்கி தந்தாள். அவனோ அவளை விசித்திரமாகப் பார்த்தான்

  

”என்ன அப்படி பார்க்கற“

  

”இல்லை எனக்கு நரகத்தை காட்டப்போறேன்னு சவால்விட்டுட்டு இப்ப பக்கத்துல படுங்கறியே ஒண்ணும் விளங்கலையே”

  

”நான் படுத்துக்க மட்டும்தான் சொன்னேன்”

  

”என்ன காரணம்”

  

”டைல்ஸ் தரையில படுக்காத காய்ச்சல் வந்துடும்”

  

”அடடே என் மேல என்ன ஒரு கரிசனம், கட்டாந்தரையில படுத்து தூங்கின எனக்கு இந்த தரை ஒண்ணும் கஷ்டம் இல்லை”

  

”யார் உதவி கேட்டாலும் தட்டாம செய்றவனா நீ, நான் சொன்னதை கூட நீ செய்யலை பெரிசா வந்துட்ட பேச” என சொல்ல அவனோ கோபத்துடன் தரையில் இருந்த தலையணை எடுத்து காவேரி பக்கத்தில் வைத்து படுத்து அவளை பார்த்தபடி பேசினான்

  

”போதுமா”

  

”போதும் இதோட நிப்பாட்டிக்க தப்பித்தவறி உன் கையோ காலோ என் மேல பட்டிச்சி”

  

”என்ன செய்வ” என கேட்க அவளோ தன் தலையணைக்கு கீழ் வைத்திருந்த அருவாளை எடுத்து அவனது கழுத்தின் மீது வைத்து

  

”கழுத்தை அறுத்துடுவேன்”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.