(Reading time: 36 - 72 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

பொண்ணுங்க நிக்கறாங்கன்னு நினைப்பா ஏதோ நீ ஊருக்கு நாலு நல்லது செய்றதால உன் மேல சில பொண்ணுங்க ஆசைப்பட்டிருக்கலாம் இல்லை உன்கிட்ட இருக்கற சொத்தை பார்த்து சிலர் ஆசைப்பட்டிருக்கலாம் அவ்ளோதானே தவிர உன்னை மட்டுமே விரும்பறவங்க இங்க யாருமே இல்லை அதை புரிஞ்சிக்க”

  

”சொடுக்கு போட்டா பொண்ணுங்க லைன்ல நிப்பாங்கன்னு நான் என்னிக்குமே நினைச்சதில்லை, பொண்ணுங்களை மதிப்போடவும் மரியாதையோடவும் பார்க்கறவன், என்னிக்குமே எந்த பொண்ணையும் தப்பான கண்ணோட்டத்தில பார்த்ததில்லை அட எதுக்கு நான் பொண்ணுங்களை பார்க்கலை தெரியுமா, எனக்கு கல்யாணம் ஆயிடுச்சிம்மா, இனிமேல என்னை எந்த பொண்ணும் பார்க்காது நானும் எந்த பொண்ணையும் பார்க்க மாட்டேன்”

  

”இந்த பேச்சுக் கொண்ணும் குறைச்சல் இல்லை கொம்பா அப்புறம் என்ன முடிவு எடுத்திருக்க”

  

”எதைப்பத்தி கேட்கற”

  

”அதான் இந்த முதலிரவு பத்தி”

  

”இதுல முடிவு எடுக்க என்ன இருக்கு, உனக்கு தூக்கம் வந்தா தூங்கு எனக்கும் தூக்கம் வருது, நானும் அப்படியே போய் தூங்கறேன்“

  

”எங்க போவ”

  

”வெளியதான்”

  

”நீ வெளிய போனா எல்லாரும் உன்னை திட்டுவாங்க”

  

”அப்ப விடு நான் இங்கயே ஒரு மூலையில படுத்து தூங்கறேன்”

  

”இதுதான் உன் முடிவா”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.