(Reading time: 36 - 72 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

என சொல்ல அவனோ அரண்டான்.

  

”அருவா எதுக்கு தேவையில்லை, என்கிட்ட கட்டுப்பாடு இருக்கு உன் மேல என் கைகால் படாது நம்பிக்கையோட தூங்கு”

  

”பார்க்கலாம் பார்க்கலாம்” என சொல்லியபடியே அவனைப் பார்க்க அவனும் அவளையே பார்த்தான்.

  

இருவரின் மனதிலும் ஓராயிரம் எண்ண ஓட்டங்கள், அதில் இருவருக்குமே ஒன்று போல எண்ணங்கள் ஓடியது, அவர்களுக்குள் முதலிரவு நடந்தால் எப்படியிருக்கும் என அவர்களுக்கு அவர்களே கற்பனை செய்து பார்த்து கொண்டார்கள். அதில் காவேரி உணர்ச்சி வசப்பட்டு முனகினாள், அவனோ உடம்பை நெளித்தான், அதில் அவனது கை தெரியாமல் அவளின் மீது பட்டுவிட அவள் கண்கள் மூடி சிணுங்கினாள். அவனோ அச்சத்தில் பதறி தனது கையை எடுத்துக் கொண்டு அவளைப் பார்த்தான்.

  

”நல்லவேளை தூங்கிட்டா இல்லைன்னா என் தலை துண்டாயிருக்கும் சே சந்நியாசி ஆகப் போறவனா நீ, இவ்ளோ மோசமாவா கற்பனை செய்துப் பார்க்கறியே அதுவும் இவள்கூடவா இவளுக்கே உன்னை பிடிக்கலை, அப்படியிருக்கறப்ப எப்படி உன்னால இப்படியெல்லாம் கற்பனை செய்ய முடிஞ்சது, போதும் போதும் இனி இப்படியொரு கற்பனையை காண கூடாது தப்பு சிவாய நம சிவாய நம” என மனதுள் புலம்பிக் கொண்டான் கொம்பன்.

  

காவேரியோ உணர்ச்சி பெருக்கில் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவனை நெருங்கினாள். அவள் நெருங்குகிறாள் என அறிந்தும் கொம்பன் தடுக்கவில்லை அதற்காக அவளை வாரி அணைக்கவும் இல்லை சிலையாகி போனான். அவளோ அவன் மேல் கை கால் போட்டு அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள் அவளின் உடல் உஷ்ணமாக இருந்தது, அவள் விடும் மூச்சு காற்று கூட உஷ்ணமாக வெளி வந்தது அந்த காற்றானது கொம்பனை இம்சித்தது. குளிர் ஜுரம் வந்தவன் போல நடுங்கிப் போனான். அவளின் அணைப்பு அதிகரித்தது. பெண் வாசம் இல்லாமல் இருந்த கொம்பனுக்கு காவேரியின் வாசம் என்னென்னமோ செய்தது, மெல்ல மெல்ல தன் கட்டுப்பாடு இழப்பதை உணர்ந்து

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.