நினைச்சேன் இல்லை இறப்புக்கு முன்னாடியே எனக்கு நீ சொர்க்கத்தை காட்டினியே, எதுக்கும் அடங்காத என்னை அடங்க வைச்சியே, நாய்களோடவே என்னோட வாழ்க்கையை ஓட்டிய என்னை நாய் போல உன் பின்னாடி வரவைச்சியே, இதுக்கு என்ன அர்த்தம் உன் மேல எனக்கு இருக்கற இந்த மோகத்தை எப்படி நான் விலக்கறது, இப்ப கூட உன்னைப் பார்க்கறப்ப என் இரத்தம் கொதிக்குது, உடம்பு துடிக்குது, நினைச்சா உன்னை நான் சொந்தமாக்கிக்குவேன், யார் என்னை தடுப்பாங்க உன்னாலயும் என்னை தடுக்க முடியாது ஆனா, அதை செய்ய மனசு வரலை அதுக்காக உன்னை விட்டுடவும் முடியலை பாவி நரகத்தை காட்டறேன்னு சொன்னியே உண்மையான நரகமே இதுதான், நூறு அடிகூட கொடு தாங்கிக்கிறேன் ஆனா என்னை இப்படி தவிக்க வைச்சி பார்க்கறியே அய்யோ அய்யோ என்னால முடியலையே, ஏய் முறைப்பொண்ணே உன்னைதான் என்னை பாரு ஒரு முறை பாரு உன்கால்ல விழுந்து பிச்சை கேட்கறேன் என்னை ஏத்துக்க” என பினாத்திக் கொண்டிருக்க அவன் சொன்னதைக்கேட்டு காவேரிக்கு உள்ளுக்குள் குழம்பினாள்.
”என்ன இப்படி கெஞ்சறான் பாவமா இருக்கு, நமக்கும் ஏக்கமா இருக்கு சரின்னு அவனை ஏத்துக்கலாமா வேணாமா ஆனா அவனை எப்படி நாம அவனை பார்க்கவே பிடிக்கலையே பேசாம கண்ணை மூடிக்கலாம் சே சே இது ரொம்ப கேவலம், அவன் சொன்னதை கேட்டு அடிபணிஞ்சி போனா அவன் ஜெயிச்சிடுவான், அதுக்கு அப்புறம் நம்மளை அடக்கி ஆளுவானோ, இல்லை அவனால நமக்கு ஏற்பட்ட அவமானம்லாம் மறந்தா போயிட்டோம், ஒவ்வொரு முறையும் கல்யாணம் நிக்கறப்ப கூனிகுருகி நின்னோமே வாழ்க்கையை வெறுத்தோமே, நான் பட்ட கஷ்டங்களை விட இப்ப அவன் படற கஷ்டம் பெரிசு இல்லை, நான் சொன்ன மாதிரியே அவனுக்கு நரகத்தை காட்டனும், புலம்பட்டும், கஷ்டப்படட்டும், அவனால எனக்கு ஏற்பட்ட கஷ்டத்துக்கு அவனும் கஷ்டபடனும், அதெப்படி கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் என்னை பார்த்தாலே பிடிக்காது ஆனா, படுக்கைன்னு வந்தபின்னாடி பிடிச்சி போச்சா சே இந்த ஆம்பளைங்க முழு மோசக்காரங்க, அவங்களுக்கு தேவைன்னா காலை பிடிப்பாங்க தேவையில்லைன்னா கழுத்தை பிடிப்பாங்க, இப்ப இவன் காலை பிடிக்கறான்னு நாம சம்மதிச்சா அடுத்த நாளே கழுத்தை பிடிப்பான் கூடாது முழுமனசா இணையனும் சும்மா சின்ன சின்ன உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டு மனசு மாறிடக்கூடாது நாம உறுதியா இருக்கலாம்” என மனதில் நினைத்தபடியே இருந்த நேரம் கொம்பன் உணர்ச்சி பெருக்கில்