”ஆஆ சொல்றேன் இப்ப சொல்றேன் உன் பேரு காவேரி போதுமா”
”இது போங்காட்டம்“
”எதுவோ ஒண்ணு நீ கேட்டதுக்கு நான் பதில் சொல்லிட்டேன்ல, அப்புறம் என்ன போ போய் எனக்கு சாப்பாடு எடுத்து வை, காலையில இருந்து ஒரே வேலை அசதியா இருக்கு சாப்பிட்டு தூங்கனும்”
”போ முடியாது நீ என்னை ஏமாத்தற” என சொல்ல அவனோ சண்முகத்திடம்
”மாமா நீங்க வாங்க நாம சாப்பிட்டு தூங்கலாம், இன்னிக்கு உங்க பொண்ணு காவேரிக்கு சாப்பாடும் இறங்காது தூக்கமும் வராது, அவளோட சாப்பாட்டை வீணாக்காம நாமளே எடுத்து சாப்பிட்டு தூங்கலாம் வாங்க மாமா” என அவரை அழைத்துக் கொண்டு
காவேரியைப் பார்த்து
”காவேரி” என அழகாக அழைத்துவிட்டு சாப்பிடச் செல்ல முதல் முறையாக கொம்பன் தனது பெயரை உச்சரிக்கவும் சிலிர்த்துப் போனாள் காவேரி.
தொடரும்...