இல்லாதபோது, அவரைப் பற்றிக் குறை கூறக்கூடாது.வள்ளி மணவாளனான, மயில் வாகனனான, வலிமை பெற்ற முருகப் பெருமானை போற்றுவாய் மனமே.
என அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் அதைக்கேட்டு அனைவரும் புரிந்துக் கொண்டார்கள். அதன்பின் அவள் பேசினாள்
”இதுவரைக்கும் இந்த கல்லூரி எப்படி வேணும்னாலும் இருந்திருக்கலாம் ஆனா இனிமேல அப்படியிருக்க கூடாது, இங்க ஒழுக்கம் மிக முக்கியம் உங்களுக்கு தாளாளர் மூலமா தரப்பட்ட சுதந்திரமானது வெளிய அலையறதுக்கும் கதை பேசறதுக்கும் விளையாடறதுக்கும் கான்டீன்ல இருக்கறதுக்கும் இல்லை, சுதந்திரமா நீங்க நினைச்சதை வெளிய சொல்றதுக்குதான், சுதந்திரம்ங்கறதை நீங்க எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க, நான் அதை சரியாக்க வந்திருக்கேன்
இனிமேல சரியான நேரத்துக்கு எல்லாரும் காலேஜ்க்குள்ள இருக்கனும், பெல் அடிச்சதும் எல்லாரும் வகுப்புல இருக்கனும் அநாவசியமா கான்டீன்ல இருக்க கூடாது, பிரேக் டைம்ல மட்டும்தான் கான்டீன்ல இருக்கனும், அதே போல ஆசிரியர்களும் வகுப்புல பாடம் எடுக்கனும் வேலையில்லாம வெட்டியா ஸ்டாப் ரூம்ல இருக்க கூடாது” என சொல்ல மாணவர்கள் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக் கொள்ள ஆசிரியர்களோ கண்ணகியை விரோதியைப் போல பார்த்தார்கள்
”என்னாச்சி என்னைப் பார்த்தா எதிரி போல தெரியுதா பரவாயில்லை நீங்க என்னை எதிரியா கூட நினைக்கலாம் தப்பில்லை, ஆனா எனக்கு உங்களோட ஒழுக்கம் ரொம்ப முக்கியம், நீங்க எல்லாரும் ஒழுக்கமா நடந்துக்கனும், நல்லா படிக்கனும், பரிட்சையில முதல் மார்க் எடுக்கனும், கல்லூரிக்கு உங்களால நல்ல பெயர் புகழ் கிடைக்கனும், உங்களை பொறுப்பா பார்த்துக்கறது என்னோட கடமை
நான் கடமையில ரொம்ப ஸ்ட்ரிக், அதனால நான் சொல்றதை நீங்க செய்றதை தவிர வேற வழியில்லை, செய்ய தவறின ஆசிரியர்களுக்கு வேலை பறிபோகும், அதே போல செய்ய தவறின மாணவர்களோட பெற்றோர்கள் வரவழைக்கப்படுவார்கள், அதுக்கு அப்புறமும்