சட்டென வந்த சிரிப்பை தொலைத்துவிட்டு வண்டியை சீரான வேகத்தில் ஓட்டினான் கார்மெண்ட்ஸ் நோக்கி.
மறுபக்கம் கார்மெண்ட்சில் வேலை செய்யும் பெண்கள் கார்மெமண்ட்சை நோக்கி அகத்தியன் வாங்கித் தந்த சைக்கிள்களில் வரிசையாக ஓட்டிக் கொண்டு சென்றார்கள்.
அதே டீக்கடை அதே ஆட்கள் இம்முறை சைக்கிளில் வரும் பெண்களை ரசித்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன்
”அடஅடஅட நம்ம பொண்ணுங்க சைக்கிள் ஓட்டிக்கிட்டு வர்ற அழகே தனிதான்” என சொல்ல இன்னொருவனோ
”நம்ம பொண்ணுங்க மட்டுமா, அங்க பாரு கீழவீதி பொண்ணுங்களும்தான் வர்றாளுங்க“
”இவளுங்க வேற மான்கூட்டத்தில பன்னிங்க போல வர்றாளுங்க பாரு இவளுங்க எல்லாம் இப்படி வரலைன்னு யார் அழுதா”
”இவளுங்களை வேலைக்கு சேர்த்ததே தப்பு, இவளுங்க இல்லைன்னா அந்த கார்மெண்ட்ஸ் என்ன ஓடாதாம்மா”
”இதுங்களோட சேர்ந்து நம்ம வீதி பொண்ணுங்களும் வேலை செய்றதை நினைச்சாலே அருவருப்பா இருக்கு
”அதோ அவளைப் பாரேன் நாச்சியா வர்றா பாரு” என ஒருவன் சொல்ல அந்த டீக்கடையே ஆஆ என வாய்பிளந்து பார்த்தது. நாச்சியா சைக்கிளை அசால்ட்டாக ஓட்டிக் கொண்டு வந்தபடி இருந்தாள். அவள் கடந்து செல்லும் வரை டீக்கடையே அமைதியாக இருந்தது, அவள் சென்றதும்
”என்ன பொண்ணுடா பன்னிக்கூட்டத்தில கூட மான் இருக்குதே”
”எல்லாம் காலக்கொடுமை, நாச்சியா யாரு கீழவீதியை சேர்ந்தவ ஆனா அவளைப் பார்க்க