பரவியிருந்தது. அங்கமுத்து அங்கிருந்த அனைவரையும் அவசரப்படுத்தி வேலை வாங்கினார். அதைப்பார்த்தபடி வந்த அகத்தியனோ
”மாமா மாமா நிதானம், பொறுமை எதுக்கு இப்படி எல்லாரையும் அவசரப்படுத்தி வேலை வாங்கறீங்க”
”அகத்தியா இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் வரப்போறாங்க”
”வரட்டுமே அதனால என்ன நம்மகிட்ட எல்லாம் தெளிவா இருக்கறப்ப நாம ஏன் பயப்படனும்”
”அப்படியில்லை அகத்தியா கார்மெண்ட்ஸ் தொடங்கி 3 வருஷமாச்சி, இப்ப போய் ரெய்டு வர்றாங்கன்னா என்ன அர்த்தம்“
”என்ன அர்த்தம் அவங்க கடமையை செய்ய வர்றாங்கன்னு அர்த்தம்”
”அதான் இல்லை எதிரி எவனோ செய்த சூழ்ச்சி இது”
”எதிரியா“
”ஆமாம் தொழில் எதிரி அகத்தியா”
”ப்ச் மாமா எதையாவது சொல்லனும்ங்கறதுக்காக சொல்லாதீங்க, நான் யாரையும் எதிரியா நினைச்சதில்லை எனக்கு போய் யார் எதிரியிருப்பாங்க, அப்படியே இருந்தாலும் எனக்கு பயமில்ல இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் வரட்டும், ரெய்டு நடத்தட்டும், நம்மகிட்ட கணக்குகள் தெளிவா இருக்கு, அப்புறம் நாம ஏன் பயப்படனும் அமைதியா இருங்க மாமா” என சொல்லிவிட்டு அகத்தியன் தன் அறைக்குச் செல்ல அங்கமுத்துவிற்கு பேயறைந்ததைப் போலானாது.
அகத்தியன் வந்ததும் மேனேஜர் குமரப்பன் அவசரமாக அவனை காணவந்தார்
”வாங்க மேனேஜர் உங்களைதான் எதிர்ப்பார்த்துக்கிட்டு இருந்தேன், இன்னிக்கு கார்மெண்ட்ஸ்ல