அப்போது யாரோ தப தப என்று ஓடி வரும் சத்தம் கேட்டது.
“சாரி, சாரி, அடி ஏதாவது பட்டுடுச்சா?” கேட்டுக் கொண்டே அவள் அருகே ஓடி வந்தான் வினாயக். சக்தி அவனை ஆச்சர்யமாக பார்த்தாள்.
“இதுவும் உன்னோடது தானா? உன் நாய் குட்டி மாதிரியே இருக்கேன்னு நினைச்சேன். ஆறு ஏழு வருஷமாச்சே இன்னும் நாய் குட்டியாவே இருக்கு? வளரவே வளராதா?” சக்தியின் கேள்விகளில் இருந்த கேலியும் கிண்டலும் புரிந்து வினாயக் குழம்பி போய் நின்றான்.
“எனக்கு உங்களை தெரியுமா? உங்களுக்கு ஜூப்பிடரை தெரியுமா? எப்படி தெரியும்?”
“ஓ, இது பேரு ஜூப்பிட்டரா? முன்னாடி மெர்குரின்னு இருந்துச்சு?” சக்தி ‘அதை’யே பார்த்துக் கொண்டு வினவினாள்!
“அது பழைய வெர்ஷன். சாரி, எனக்கு உங்களை ஞாபகம் இல்லை? நீங்க???”
“என் பேர் சக்தி. ஒரு ஆறு ஏழு வருஷத்துக்கு முன்னால சென்னைல ஒரு பார்க்ல ஒரு வித்தியாசமான ஜந்து என்னை அட்டாக் செய்தது. அது...”
“ஓ, காட்! சக்தி! நீங்க போலீஸ் சக்தி?” வினாயக் சக்தி பேசி முடிக்கும் வரைக்கும் காத்திருக்காமல் நடுவில் பேசினான்.
“அதே சக்தி தான்!”
“சாரி சக்தி. நான் அந்த இன்சிடென்ட்டை மறந்தே போயிட்டேன். உங்களை ஜூப்பிட்டர் ஹர்ட் செய்திருச்சா?”
“இல்லை. ஆனால் என் இடத்துல வேற யாராவது இருந்திருந்தா கட்டாயம் அடிப் பட்டு இருக்கும். அது தாவி வந்த விதத்துக்கு அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் கூட வந்திருக்கலாம்!”