செய்ற கேரக்டர். அதான் கடியா இருக்கு!”
“எப்படி சொல்ற?”
“ஐஸ்வர்யாவைப் பொறுத்த வரைக்கும் எல்லாத்தையும் அவ கண்ட்ரோல்ல வச்சுக்குறது அவளுக்கு பிடிக்கும். என் அண்ணன் ஹேர்ஸ்டைல் ஆரம்பிச்சு, அவன் என்ன சாப்பிடுறான், எத்தனை மணிக்கு சாப்பிடுறான்னு எல்லாமே அவ சொல்றது தான் அவன் கேட்டாகனும்”
“அவங்க இரண்டுப் பேரும் லவ் செய்றாங்க. எல்லா பொண்ணும் அப்படி தானே எக்ஸ்பெக்ட் செய்வாங்க. நீயா இருந்தா எதிர்பார்க்க மாட்டீயா?”
அதெல்லாம் மட்டும் தான் குறைச்சல்! மனசுக்குள் நொந்துக் கொண்டாள் ப்ரியம்வதா.
“சரி, என் அண்ணன் விஷயம் ஓகே. அவ அதோட நிறுத்த மாட்டா. நான் என்ன செய்றேன், என்ன செய்யனும்னு எல்லாம் கூட சொல்லுவா. அதை எல்லாம் நான் கேட்கனும்னு எதிர்பார்க்கிறா. என் அம்மா, அப்பா பொதுவா எங்களுக்கு சுதந்திரம் கொடுத்து வளர்த்தாங்க. இவளோட இந்த எதிலேயும் எல்லாத்திலேயும் மூக்கை நுழைக்குற டாக்டிக் எனக்கு பிடிக்கவே இல்லை. அம்மாவை நினைச்சு கொஞ்சம் வருத்தமா இருக்கு. அண்ணனுக்கு கல்யாணம் ஆனப் பிறகு என்ன நடக்குமோன்னு பயமா இருக்கு.”
“உன் அம்மா மேனேஜ் செய்துப்பாங்க. உன்னைப் பத்தி தான் யோசிக்கனும். சீரியஸாவே உன் கல்யாணம் பத்தி யோசி ப்ரியம்வதா. கல்யாணத்துக்கு அப்புறம் உன் அண்ணா மாறிப் போயிட நிறைய வாய்ப்பு இருக்கு. உனக்கே உனக்கா யாராவது வேணும். அதான் உனக்கு நல்லது.”
“யாராவது ஏன்? அதான் நீ இருக்கீயே??? இல்லையா?”
“பைத்தியம் மாதிரி பேசுற? நான் எந்த அர்த்தத்துல சொல்றேன், நீ எந்த அர்த்தத்துல சொல்ற? நான் உனக்கு எப்போவும் சப்போர்ட் செய்வேன். ஆனால் அது வேற. நான் சொல்றது கல்யாணம் செய்து அந்த உரிமை கூட வர சப்போர்ட்!”
“நான் பைத்தியம் மாதிரி பேசலை. நீ தான் எதையும் புரிஞ்சுக்காம...“ ப்ரியம்வதா பேச்சை