"இவர் சைன்டிஸ்ட் தான். அதுக்காக யார் எது செய்தாலும் இவருக்கு தெரியுமா?" ப்ரியம்வதா இன்ஸ்பெக்டரிடம் எரிந்து விழுந்தாள்.
தென்றல்வாணன் கோபத்துடன் முகத்தை சுளித்தான். அதை கவனித்த வினாயக், அவனை சமாதானம் செய்தான்.
"அமைதியா இரு ப்ரியம்வதா. அவர் ஹெல்ப் கேட்டு வந்திருக்கார்! நீங்க சொல்ற மாதிரி ட்ரோன் நானும் கேள்விப் பட்டு இருக்கேன் இன்ஸ்பெக்டர் சார். இன்ஃபாக்ட், சில வருஷங்களுக்கு முன்னாடி அப்படி ஒன்னு நானே டிசைன் செய்தேன்," என்றான் வினாயக்.
தென்றல்வாணனின் கண்கள் கூர்மை ஆனது.
"டிசைன் செய்தது என்ன ஆச்சு?"
"ஒன்னும் ஆகலை சார். நான் அதை டிசைன் செய்தப்போ இதெல்லாம் வேஸ்ட்ன்னு சொல்லி என் கம்பெனி மேனேஜ்மென்ட் ரிஜக்ட் செய்துட்டாங்க."
"ஐ ஸீ!" தென்றல்வாணன் சந்தேகத்துடன் வினாயக்கின் பாடி லேங்குவேஜை கவனித்தான். பொய் சொல்வதற்கான அறிகுறி எதுவும் அதில் தெரியவில்லை.
"இன்ஸ்பெக்டர்?" ஆச்சர்யம் கலந்து ஒலித்த குரல் தென்றல்வாணனையும் மற்ற இரண்டுப் பேரையும் திரும்பி பார்க்க வைத்தது. கலைவாணி வேகமாக வந்துக் கொண்டிருந்தாள்.
"வாக்கிங் போகலாம்னு வந்தேன். உங்க ஜீப் நிக்குறதைப் பார்த்தேன். வீட்டுக்கு வாங்க சார்!" கலைவாணி தென்றல்வாணனை உறவினனை போல உபசரித்தாள்.
"அதெல்லாம் வேண்டாம் மேடம். இன்னொரு நாள் சத்யாவோட வரேன்," என்றான் தென்றல்வாணன்.