"நீங்களும் இதையே தான் சொல்லிட்டு இருக்கீங்க. வர தான் மாட்டேங்குறீங்க!"
"இல்ல, இப்போ அஃபிஷியலா வந்திருக்கேன். அதான்..." தென்றல்வாணன் குறிப்பாக வினாயக்கை பார்த்தான். வினாயக் அதை கவனித்தாலும் கவலைப் படவில்லை. ப்ரியம்வதாவிற்கு தான் கோபம் பொங்கியது!
"இங்கே பாருங்க இன்ஸ்பெக்டர் சார். நீங்க யாரா இருந்தாலும் சரி. சும்மா எல்லாம் வினாயக்கை வந்து தொல்லை செய்யாதீங்க. அவர் ரொம்ப பிஸி. உடம்பு வேற சரியில்லை!" ப்ரியம்வதா பொரிந்து தள்ளினாள். அவள் பேசிய விதம் கலைவாணிக்கே அதிசயமாக இருந்தது.
"நீங்க வாங்க வினாயக். உங்க சைபோர்க் அசெம்பிள் செய்து முடிக்கனும்." ப்ரியம்வதா வினாயக்கின் கையை பிடித்து இழுத்தாள். வேறு வழி இல்லாமல் அவளுடன் நடந்த வினாயக், இன்ஸ்பெக்டரையும், கலைவாணியையும் பார்த்து ஒரு ஸ்மைல் செய்து விடைப் பெற்றே சென்றான்.
"என்ன ஆச்சு இவளுக்கு?" கலைவாணி குழப்பத்துடன் யோசித்தாள்!
"யாரு மேடம் இந்த பொண்ணு?" என்றான் தென்றல்வாணன்.
"என் மக இன்ஸ்பெக்டர். பேரு ப்ரியம்வதா!"
"ஓ, ஓகே, ஓகே!"
"அவ எதுக்கு இப்படி கோபமா போறா சார்?"
தென்றல்வாணன் அவன் அங்கே வந்த காரணத்தையும், வினாயக்கிடம் பேசியது பற்றியும் சுருக்கமாக கலைவாணியிடம் சொன்னான்.
"வினாயக்கையா சந்தேகப் படுறீங்க இன்ஸ்பெக்டர்??? நீங்க சொல்ற அந்த துப்பாக்கி குண்டு