“எந்த உயில் பத்திரம்“
“ம் உங்க மனைவி எழுதின உயில் பத்திரம்“
“அப்படி எந்த பத்திரமும் இல்லை”
”இதப்பாருங்க, எனக்கு எல்லா உண்மையும் தெரியும் மரியாதையா அந்த பத்திரத்தை கொடுத்துடுங்க, அதுதான் உங்களுக்கு நல்லது நானா தேடி எடுத்தேன், அப்புறம் நீங்க நடுத்தெருவுக்குதான் வரனும்”
”புரியாம பேசாத, அப்படியொரு பத்திரமே ஆண்டாள் எழுதலை”
”இதுக்கு மேல உங்ககிட்ட கேட்டா பொய்தான் சொல்வீங்க, பரவாயில்லை நானே தேடிக்கிறேன்” என சொல்லிவிட்டு நகர முயன்றவளை ஆத்திரத்துடன் நாச்சியாவின் கழுத்தை இறுக்கினார்
”நீ இருந்தா ஆண்டாளோட ஆவி வந்து என்னை பயமுறுத்தி என்னையும் சாகடிப்பா, விடமாட்டேன் நீ செத்துடு அதான் எல்லாருக்கும் நல்லது, சாவு சாவு” என அவளை சாகடிக்க முயல அவளோ மூச்சுவிட சிரமப்பட்டாள் சரியான நேரம் பார்த்து அந்த இடத்திற்கு அகத்தியன் வந்து கத்தவும் நாச்சியா தப்பித்தாள்.
தாத்தாவோ பயத்தில் அகத்தியனிடம்
”அகத்தியா இவள் என்னை கொல்ல வந்தா, என்னை காப்பாத்தும் பொருட்டு நான் அவளை தாக்க வேண்டியதா போச்சி, அவளை இங்கிருந்து விரட்டிடு அவளோட அடுத்த குறியே நான்தான் என்னை கொல்லனும்ங்கற வெறியோட இருக்கா, அவளை இந்த வீட்டை விட்டு துரத்து அகத்தியா”
”போதும் தாத்தா நாச்சியா மேல எந்த தப்பும் இல்லை, அப்பா தற்கொலை செய்துக்கிட்டதுக்கு