“இன்னிக்கு உன்னை கொல்லாம விடமாட்டேன் மரியாதையா அந்த போனை கொடு நான் நந்தினிகிட்ட பேசனும்”
“முடியாது அவளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு”
“இப்ப நீ தரப்போறியா இல்லையா”
“முடியாதுண்ணா”
“அப்புறம் நான் உன்னை விரட்டிடுவேன் நம்ம ப்ரெண்ட்ஷிப் கூட கட்டாயிடும்”
“ஏன் இப்படி பேசறீங்கண்ணா என் தங்கச்சிக்காக நீங்க ஏன் என்னை விரட்டனும் நான் என்ன தப்பு பண்ணேன் தப்பெல்லாம் உங்களோடது”
“நானா நான் என்ன செஞ்சேன்”
”முதல்ல உங்க மனசுல என்ன இருக்குன்னு சொல்லுங்க”
“என் மனசுல எதுவும் இல்லை”
“அப்புறம் என்ன நான் அவளுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கத்தான் போறேன்” என சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றான் அர்ஜூன்.
அவன் சென்றதும் ரிஷியால் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. அவள் பேசியதே அவன் காதில் கேட்டுக்கொண்டிருக்க வேண்டா வெறுப்பாக வீட்டுக்கு வந்தான்.
அவனைப்பார்த்த தாத்தா
”வாடா சாப்பிடலாம்”