பார்த்துட்டா அவளைத்தான் ரிஷிக்கு கட்டிவைப்பேன்னு ஒத்த கால்ல நிப்பா என்ன செய்றதுன்னு தெரியலை”
“அதான் என் பயமே. எனக்கு ஒண்ணும் இல்லை தாத்தா நான் சரின்னு சொல்லிடுவேன் என் தங்கச்சியும் சரின்னு சொல்லிடுவா ஆனா ரிஷிண்ணா எந்த பதிலும் சொல்லாம இருந்தா நல்லாவாயிருக்கும் அவர் பாட்டுக்கு விட்டுட்டு போயிட்டா பாவம் தாத்தா சின்ன பொண்ணு” என சொல்ல தாத்தாவும் அதற்கு
”ஆமாம்டா நீ சொல்றதும் சரிதான் ஆனா ரிஷியை நினைச்சா எனக்கு ஆச்சர்யமாயிருக்கு எத்தனையோ டீலிங் எத்தனையோ மீட்டிங் பார்த்தவன் தன் சொந்த வாழ்க்கையை பத்தி தீர்மானிக்க இப்படியா யோசிப்பான்”
“அவர் ஏன் இவ்ளோ ஆழமா யோசிக்கறார்ன்னுதான் எனக்கு புரியலை”
“ஒரு வேளை உன் தங்கச்சியாதான் தேடி வரனும்னு இருக்கானா”
“அப்படிண்ணா கூட நான் அனுப்பி வைப்பேனே அவளுக்கென்ன அவளுக்கும் அண்ணாவை பிடிக்கும் அண்ணாக்கும் அவளை பிடிக்கும் ஆனா யாரும் ஒருத்தரை ஒருத்தர் சொல்லிக்காம இருக்காங்க நடுவில இருக்கற நான்தான் மாட்டிக்கிட்டு கஷ்டப்படறேன்” என நொந்துப்போய் பேசினான் அர்ஜூன்
”சரிடா விசயத்தை என் கிட்ட சொல்லிட்டல்ல விடு நான் பார்த்துக்கறேன் நான் செய்ற வேலையில அவனே அலறி அடிச்சி அவன் மனசுல இருக்கற விசயத்தை சொல்லிடனும்”
“சரி தாத்தா அப்படி நடந்தா எனக்கும் சந்தோஷம்தான் நானும் தயாராயிருக்கேன் என்னிக்கு அண்ணா சொல்றாரோ அன்னிக்கே என் தங்கச்சியை கூட்டிட்டு வரேன்”
”சரி சரி போனை வைச்சிடறேன் மேற்கொண்டு செய்ய வேண்டியதை நான் செய்யறேன்” என சொல்லி போனை வைத்தவர் நீண்ட நேரமாக எதையோ யோசித்துக்கொண்டிருந்தார்
ரிஷி சொல்வது போல வீட்டில் பார்த்த 3 பெண்களை திருமணம் செய்தாலும் அவன்