கேலியும் கிண்டலும் செய்திருப்பாங்க, இதை ஏன் நான் அன்னிக்கு புரிஞ்சிக்கலை, அன்னிக்கு அவள் மனசை நான் காயப்படுத்தினேன், இப்போ என் மனசு காயப்பட்டிருக்கு இதுக்கு யார் மருந்து போடுவா” என தனக்குதானே புலம்பிவிட்டு தன் இடத்திற்கு வந்தமர்ந்தான்.
அவனுக்கான வேலைகள் ரயில் வண்டி போல வந்தபடி இருக்க அவன் எதை முடிப்பது எதை விடுப்பது என குழம்பி அனைத்து வேலைகளையும் சொதப்பி வைக்க அதை அறிந்த ஹரிணியோ அவனை அழைத்து விசாரித்தாள்
”என்னாச்சி தருண், முதல் நாளே நல்லா சொதப்பி வைச்சிருக்கீங்க இந்த விசயம் தெரிஞ்சா உங்களை இல்லை என்னைதான் எம்டி திட்டுவாரு, ஏன்னா உங்களை நான்தானே ஹெச் ஆர் போஸ்ட்டுக்கு சிபாரிசு செய்தேன், இப்போ பாரு தருண் இப்படி வேலைகளை செய்யாம சொதப்பறானேன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்றது தருண்”
”சாரி மேடம் அதுவந்து“
”மேடம் இல்லை சக்தி”
”சரி சரி சக்தி போதுமா” என எரிச்சலாக பேச அவளோ
”இந்த கோபத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை, உங்களுக்கு இந்த வேலை தந்தது தப்போன்னு யோசிக்க வைச்சிட்டீங்க தருண்“
”சாரி இனிமேல இப்படி நடக்காது, நான் என் வேலையை சரியா செய்றேன்“
”பார்க்கலாம் உங்களுக்கு ஒரு வாரம் டைம் அதுக்குள்ள உங்ககிட்ட நல்ல மாற்றம் தெரியனும் அப்படியில்லாம இப்படியே சொதப்பிக்கிட்டு இருந்தீங்கன்னா நானே உங்களை டீப்ரமோட் செய்துடுவேன் ஜாக்கிரதை” என மிரட்ட அதில் அரண்டுப் போய் தன் இடம் வந்தான் தருண்
”கண்ட கனவு பலிக்குதேன்னு சந்தோஷப்படறதா இல்லை இப்படி கஷ்டத்துக்கு மேல கஷ்டம் வருதேன்னு புலம்பறதா ஒண்ணுமே புரியலையே, இதுல இவளை நான் சக்தின்னு