”என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உனக்கு, இவ்ளோ தரைக்குறைவா பேசி வைக்கற”
”உங்களைப் பார்த்தா காமகொடூரன் போல தெரியுது”
”வேணாம் வார்த்தையை அளந்து பேசு”
”நீங்க செய்த வேலைக்கு இதுவே அதிகம், இதோட நிறுத்திக்குங்க“
”முடியாது எனக்கு அந்த வேலை வேணும்”
”தரமுடியாது“
”தந்துதான் ஆகனும்”
”ஏன் தரனும் மறுபடியும் நீங்க தப்பு செய்வீங்க, அதை நான் பொறுத்துக்கனுமா நியாயமா பார்த்தா நீங்க செய்த இந்த கீழ்த்தரமான வேலைக்கு உங்களை விவாகரத்து செய்திருக்கனும், செய்யாம விட்டேன்னு சந்தோஷப்படுங்க தருண்” என கோபத்தில் பொங்கிவிட்டு அவள் சென்றுவிட தருண் மிரண்டுவிட்டான்
”என்னது விவாகரத்தா கல்யாணம் ஆகி முழுசா 2 மாசம் கூட முடியலை அதுக்குள்ள விவாகரத்தா ஆஹா இவளுக்கு இருக்கற கோபத்தைப் பார்த்தா சொன்னதை செய்தாலும் செய்வா அப்புறம் நாம பட்ட கஷ்டத்துக்கு பலன் இல்லாம போகும், இப்ப என்ன வேலைதானே போச்சி போகட்டும் நாம நினைச்சப்படி வீட்லயே ஹாயா ரெஸ்ட் எடுக்கலாம், அவளே வேலைக்குப் போய் சம்பாதிச்சி வந்து நம்மளை பார்த்துக்கட்டும்” என நினைத்த உடன் அவனுக்குள் இருந்த கோபம் தணிந்தது, மகிழ்ச்சி பொங்கியது.
அன்றிலிருந்து ஹரிணி வேலைக்குச் சென்றாள் தருணோ வீட்டில் ஹாயாக ரெஸ்ட் எடுக்கலானான். அதைக் கண்டவள்
”அட்லீஸ்ட் ப்ரேக் பாஸ்ட் செய்து தரலாம்ல தனியாளா நானே எத்தனை வேலை செய்றது