அவளது அறைக்கதவை திறக்க முயன்றான் முடியவில்லை. ஆனாலும் பலம் கொண்டு எப்படியோ திறந்துக் கொண்டு உள்ளே சென்றான், ஹரிணி மயங்கி தரையில் விழுந்திருப்பதைக் கண்டு சட்டென அவளை தன் கையில் ஏந்திக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ஆஸ்பிட்டல் சென்றான். அங்கு வைத்து அவளுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முழுதாக 12 மணி நேரம் கழிந்தபின்புதான் ஹரிணி பழைய நிலைமைக்கே வந்தாள். அவள் கண்கள் திறந்ததும் அவளை காப்பாற்றியவன்
”ஹரிணி ஓகேவா” என கேட்க அவளோ அவனை பார்த்து
”இளங்கோ” என்றாள் புன்னகையுடன்
”நான் இளங்கோ இல்லை அவனோட ட்வின் ப்ரதர் முகிலன்” என சொல்ல அவளின் புன்னகை தொலைந்தது
”என்னாச்சி ஹரிணி, எனிதிங் சீரியஸ்” என கேட்க அவளோ அழத் தொடங்கினாள், அவனுக்கு சங்கடமாகிப் போனது
”அழற அளவுக்கு என்னாயிடுச்சி ஹரிணி, என்ன பிரச்சனை சொல்லுங்க” என கேட்க அவளோ
”தருணை பத்தி உங்ககிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல“
”ஆமாம் இப்ப என்ன செய்தான் அவன்”
என கேட்க அவளுக்கு பயத்தில் முகம் வெளிறி கண்களில் இருந்து தானாகவே கண்ணீர் வர முகிலன் அதிர்ந்தான்
”ஹரிணி என்னாச்சி அவன் உங்களை என்ன செய்தான்” என பதட்டமாக கேட்க அவளும் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை நடந்த அனைத்தையும் மறைக்காமல் சொல்லி முடித்து ஓவென அழுதாள்
”ராஸ்கல் இவ்ளோ அயோக்கியனா இருக்கானே சே தருணை பத்தி நீங்க சொன்னப்பவே, நான்