”அதை விட அருமையான பொக்கிஷம் உனக்கு கிடைச்சா என்ன செய்வ”
”பொக்கிஷமா என்ன உளர்ற”
”ஹரிணிதான் அந்த பொக்கிஷம்”
”என்னடா சொல்ற”
”ஆமாம் என்னால அவளுக்கு ஒரு குழந்தையை தரமுடியாது”
”ஏன்“
”ப்ச் ஒரு விபத்துல நான் ஆண்மையை இழந்துட்டேன்”
”அடப்பாவி இதுவேறயா, இன்னும் என்னென்ன விசயத்தை மறைச்சி வைச்சிருக்க”
”இப்ப அதுவா முக்கியம், நிவேதினியோட மரணத்துல சந்தேகம் இருக்குன்னு நினைச்சி அவளோட வீட்டாளுங்க என்னை அடிச்ச அடியில நான் ஆண்மையை இழந்துட்டேன்“
”ஆண்மையை இழந்துட்ட பின்னாடி எதுக்காக பவானியை நீ கல்யாணம் செய்துக்கிட்ட”
”அது என் அப்பா அம்மா செய்த கல்யாணம், எனக்கு விருப்பம் இல்லை, இந்த விசயத்தை அவங்ககிட்ட சொல்ல எனக்கு தைரியம் வரலை, இந்த உண்மை வெளிய தெரிஞ்சா எல்லாரும் என்னை கேலி செய்வாங்க, வாழவே தகுதியில்லைன்னு சொல்வாங்க, ஊர் வாயை மூட பவானியை நான் கல்யாணம் செய்துக்கிட்டேன் ஆனா, கொஞ்ச நாள்லயே அவளுக்கு என்னைப் பத்தின உண்மை எப்படியோ தெரிஞ்சிடுச்சி, அன்னியில இருந்து அவள் டார்ச்சர் தாங்கலை, டைவர்ஸ் வரைக்கும் பேசினா, எங்க அவள் கோர்ட்ல எனக்கு ஆண்மையில்லைன்னு சொல்லிட்டா எப்படி இந்த உலகத்தில என்னால வாழ முடியும், எனக்குன்னு ஒரு கெத்து இருக்கு, மதிப்பு இருக்கு, மரியாதை இருக்கு. அதை இழக்க மனசில்லாம அவளை நான் டார்ச்சர் பண்ணேன், என்னோட டார்ச்சரை தாங்க முடியாம