“ஏன் தாத்தா இப்படி படுத்தறீங்க நான்தான் சொன்னேன்ல எனக்கு நந்தினிதான் வேணும்னு”
“அவள்தான் இன்னும் வரலையே”
“ஏன் தாத்தா அவள் என்ன வரவேமாட்டாளா இன்னும் சாயங்காலம் 6 மணி ஆகலை இப்பதான் மதியமே ஆயிருக்கு பொறுங்க தாத்தா வந்துடுவா”
“அப்படியே அவள் வந்தாலும் சரி போட்டி வைச்சிதான் நான் தேர்ந்தெடுப்பேன்”
“இந்த போட்டியே வேணாம் தாத்தா அவள் வந்ததும் அவளைதான் எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லப்போறேன் அதுக்கு முன்னாடியே இந்த பொண்ணுங்களை அனுப்பிடலாமே”
“முடியாதுடா நீ லேட் பண்ணிட்ட முதல்லயே நீ சொல்லியிருந்தா கூட நான் இந்த பொண்ணுங்களை வரசொல்லியிருக்க மாட்டேன். இப்ப எல்லாரும் வந்தபின்னாடி பின்வாங்கினா உன்னை விட ஆரம்பிச்சி வைச்ச என் மேலதான் எல்லாரும் பாய்வாங்க. என்னால தாங்க முடியாது.”
“அதுக்கு இந்த மூணு பொண்ணுல ஒண்ணை நான் கட்டிக்கனுமா”
“சே சே அப்படியில்லை உன் ஆளும் வரட்டும் 4 பொண்ணுங்கள்ல ஒரு பொண்ணை தேர்ந்தெடுக்கறேன் அந்த பொண்ணு ஏன் உன் ஆளா இருக்க கூடாது யோசி”
“ஓ நீங்க உங்க கௌரவத்தை விட்டு தரமாட்டீங்க சரி நடத்துங்க நான் நந்தினிக்கு உதவ போறேன்”
“அடிவாங்குவ அப்படி நீ அவளுக்கு உதவினா உடனே அவளை வெளிய விரட்டிடுவேன்”
“தாத்தா” என அவன் கத்தவும் தாத்தா அலட்சியமாக அவனை பார்த்துவிட்டு திரும்பி பாட்டியையும் அவருடன் வந்த பெண்ணையும் ஏற இறங்க பார்த்துவிட்டு ரிஷியிடம்
Why chillzee team,
No updates for the past few days....
Very boring without Stories