“பையனா எனக்கு பையனே கிடையாதே” என சொல்லியவர் உடனே தன் தந்தையின் நினைவு வரவே
”என்னாச்சி என் பொண்ணு திரும்பவும் பையன் போல வேஷம் போட்டு வந்துட்டாளா அங்க” என கேட்க கைலாசத்துக்கு கோபமே வந்தது
”ஓ அப்ப உனக்கும் தெரிஞ்சிருக்கா. ஏன் இப்படி பொண்ணை வளர்த்து வைச்சிருக்க நீ”
“நான் அப்படி வளர்க்கலை அவளோட தாத்தா தான் இப்படி எல்லாம் செய்றாரு”
“எதுக்காக இப்படி செய்யனும்”
“அவள் மேல ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கு, அவளை யாராவது கடத்திடுவாங்களோன்னு பயந்து அப்படி பையன் போல அடிக்கடி வேஷம் போட வைக்கிறாரு ஏன் என்னாச்சி இப்ப”
“என்ன ஆச்சா சே நாசமா போச்சி”
”என்னாச்சி சொல்லு புபதி”
“இங்க வந்தவன் உன் பையன்னு நினைச்சி நான் என் வீட்ல இருந்த பொண்ணுங்களை அவனுக்கு பேசி முடிக்கலாம்னு நினைச்சேன். ஊரெல்லாம் கூட்டி வீட்லயே பொண்ணு பார்க்கற படலம் வைச்சேன். கடைசியில ஏமாந்துட்டேன். ”
“உன்னை யார் இப்படி செய்ய சொன்னது என்னைக் கேட்டிருக்கலாம்ல“
“பொண்ணு பார்க்கட்டும் மீதி பேசறப்ப உன்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா இன்னிக்கு விடிகாலையில கூட நான் இந்த பொண்ணு பார்க்கற படலத்தை பத்தி உன் பையன்கிட்ட கேட்டேன். அவன் அப்பவே உண்மை சொல்லாம விட்டான். இப்ப பாரு யார் மானம் போச்சின்னு, ஏற்கனவே உன் பொண்ணு என் பையனை விரும்பறதா நேத்து காலையில சண்டை போட்டுப் போனா, உடனே ஊருக்கு அவளை அனுப்பி வைக்கனும்னு
Next episode pls