“சரி விடு அதான் போட்டோ இல்லையே அப்புறம் என்ன வா நாம கீர்த்தனாவை தேடலாம்”
“அதுக்குத்தானே கோவைக்கு வந்திருக்கோம், அவள் படிச்ச காலேஜ்ல கேட்போம் எப்படியும் அவள் பத்தின தகவல் கிடைக்கும்”
”சரி சரி வா போவோம் இந்த நியூஸ் பத்தி கவலையை விடு வா” என சொல்ல அவனும் காரில் ஏறி கீர்த்தனா படித்த காலேஜ் நோக்கி விரைந்தான்.
தாமரை சென்றுவிட்ட துயரத்தில் சுந்தரத்தின் உடல் நிலை மோசமாகி அவரை அவரது தாமரை ஆஸ்பிட்டலிலேயே சேர்த்து வைத்தியம் பார்க்கலானார்கள் அவரது மகன்கள்.
தாமரை தேவாவிடம் இருப்பதால் சந்தோஷமாக இருந்த வைத்தியும் கீர்த்தனாவை தேட ஆளுங்களை விட்டதோடு இவ்வளவிற்கும் காரணமான பவியையும் விக்ரமையும் அவனது பாட்டியையும் ஊரை விட்டே விரட்டிவிட்டார். சரண்யாவோ நடப்பது தனக்கு சாதகமாக இல்லையே என நினைத்து ஓட்டல் அறையில் பத்திரமாக ஒளிந்துக் கொண்டே ஹாஸ்டல் கட்டுமான வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள்.
கீர்த்தனா தேவாவிற்கு கிடைப்பாளா? சுந்தரம் பிழைப்பாரா மாட்டாரா?? சரண்யா தன் தவறை உணர்வாளா??? தாமரை பாட்டியின் நிலைமை என்ன????
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்...
Next episode pls