(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

”தாமரை என்ன செய்ற உன் புருஷன்னு அவர் தப்பை மறைச்சி காப்பாத்த பார்க்கறியா” என கத்த

   

”அவரை உன்னால என்ன செய்ய முடியும் சொல்லு”

   

“அவரை நான் கொல்லப்போறேன், அவரை நம்பி கீர்த்தனாவை விட்டுப் போனா ரெண்டு பக்கமும் சதிசெஞ்சி என் வாழ்க்கையோட விளையாடிட்டாரு. நான் அன்னிக்கே அவளை கூட்டிட்டு போயி கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருந்தேன். இவர்தான் அதை இதை சொல்லி என் மனசை மாத்தினாரு. பெரிய மனுசனாச்சேன்னு நியாயமா அவர் சொன்னதை நம்பி நான் மோசம் போனேன், இவரை நான் விடமாட்டேன், நான் இவருக்கு தண்டனை தரத்தான் போறேன்” என கத்த அவரோ

   

”நீ என்ன தண்டனை கொடுத்தாலும் அவர் மாற மாட்டாரு. அவருக்கு நீ தண்டனை தரனும்ங்கறியா சரி நான் சொல்றதை செய், அப்ப அவருக்கு சரியான தண்டனை கொடுத்த மாதிரியிருக்கும்”

   

“என்ன தண்டனை”

   

“உன் பொண்டாட்டியை அவர் சூழ்ச்சி செஞ்சி விரட்டிவிட்டாருல்ல, அவர் பொண்டாட்டியை நீ கூட்டிட்டு போ” என சொல்ல தேவா வியந்தான்

   

”தாமரை என்ன சொல்ற நீ”

   

“ஆமாம் என்னை கூட்டிட்டு போ. நான் அவரோ இல்லாம போறதுதான் அவருக்கு பெரிய தண்டனையா இருக்கும்” என சொல்ல சுந்தரம் அவசரமாக முன் வந்து

   

”தேவா அப்படி செய்யாத கீர்த்தனாவை நானே தேடி உன் கையில ஒப்படைக்கறேன்” என சொல்ல சரண்யா தடுத்தார்

   

”முடியாது அப்படி நான் செய்ய விடமாட்டேன்” என கத்த பக்கத்து வீட்டில் இருந்த 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.