”உனக்கு உன் தம்பி மேல பாசம் இல்லையா”
”இருக்கு நிறையவே இருக்கு, ஒரே நேரத்தில பிறந்தோம், என் அப்பா ட்வின்ஸ் பிறந்திருக்குன்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டாராம், எங்களை வந்து பார்த்தாராம், அவருக்கு எங்களை ரொம்பவே பிடிச்சிப் போச்சாம், எங்களுக்குள்ள எந்த விசயத்திலயும் வேற்றுமை வரக்கூடாதுன்னு ஒரே மாதிரியே நடத்தினாராம், எது வாங்கினாலும் விலை கூட முன்ன பின்ன இல்லாம ஒரே விலையில இருக்கற மாதிரி வாங்குவாராம், பேர்ல கூட பாருங்க அவனுக்கு ஆனந்த்ன்னும் எனக்கு ஆனந்தின்னு வைச்சிருக்காரு, நாங்க எப்பவுமே ஒற்றுமையாக இருப்போம்னு நினைச்சாரு ஆனா, எங்களுக்குள்ள பெரிசா ஒற்றுமையெல்லாம் இல்லை, ஒண்ணா பிறந்திருந்தாலும், எங்களுக்குள்ள நிறைய விசயங்கள் வேறுபட்டது, அதை நினைச்சி எங்கப்பா வருந்தாத நாளில்லை”
”சரி இப்ப உன் தம்பி உன் முன்னாடி வந்து நின்னா என்ன செய்வ”
”உளறாதீங்க”
”சீரியஸா பேசறேன் திடுதிப்புன்னு உன் முன்னாடி உன் தம்பி வந்து நின்னா என்ன செய்வ”
”நிக்கறப்ப பார்க்கலாம் இந்தாங்க காபி” என சொல்லி காபியை தருவதற்காக வெங்கடேசனை பார்க்க அவனோ
”வாசலை போய் பாரு“
”எதுக்கு”
”போய் பாரு“
”சரி இந்தாங்க காபி”