திரும்பி வந்திருக்கேன், தயவு செய்து என்னை பழையபடி ஆக்கிடாத, இப்ப நான் இருக்கறதே எனக்கு பிடிச்சிருக்கு முன்ன மாதிரி அப்பாவியா, கோழையா, கஷ்டத்தை பார்த்து கவலைப்பட்டுக்கிட்டு, பிரச்சனையை பார்த்து பயந்து நடுங்கிக்கிட்டு, போதும் அந்த ஆனந்த் எப்பவோ செத்துட்டான், இப்பநான் புதுசா மாறி வந்திருக்கேன் மறுபடியும் உன்கூட இருந்தா செத்துப்போன பழைய ஆனந்த் எனக்குள்ள வந்துடுவான், அதனால நான் உன்கூட தங்கறதா இல்லை”
”நான் உன்னை நல்லா பார்த்துக்க மாட்டேனா என்ன”
”ஓ நீதானே எதுக்கெடுத்தாலும் சென்டிமெண்ட் பார்ப்ப, சின்ன கஷ்டம் வந்தாலும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவ”
”அதெல்லாம் அப்போ இப்ப நானும் நிறைய மாறிட்டேன் தெரியுமா வேணும்னா உன் வெங்கி மாமாவை கேளு” என சொல்ல ஆனந்தும் வெங்கடேசனை பார்க்க அவனோ இல்லை என்பது போல தலையசைக்க அதைக் கண்டு ஆனந்தி கோபத்தில் தன் கணவனை முறைக்க ஆனந்தோ நக்கலாகச் சிரித்தான்
”போதுமாக்கா தேவையா உனக்கு இது நீயாவது மார்றதாவது நீ சாவியை கொடு நான் போறேன்”
”அங்க யாரும் இல்லை“
”அதான் நிம்மதி எனக்கு யாரும் இல்லாம இருந்தாலே சந்தோஷம்தான்” என சொல்ல அதைக்கேட்டு ஆனந்தி ஏதோ பேச வருவதற்குள் வெங்கடேசன் குறுக்கே நுழைந்து வீட்டு சாவியை ஆனந்திடம் தந்து
”முதல்ல கிளம்பு விட்டா ரெண்டு பேரும் விடிய விடிய பேசிக்கிட்டே இருப்பீங்க உங்களோட பேச்சை கேட்க எனக்கு நேரமில்லை எனக்கு ஆபீசுக்கு நேரமாகுது, அவள் டிபன் செய்யனும் நீ கிளம்பு ராசா”
என சொல்ல ஆனந்தோ